Sunday, March 7

கடவுள் நம்பிக்கை வேண்டாம் என்று சொல்ல வில்லை?

எதை பற்றி பதிவு போடுறதுன்னு ஒரே குழப்பம்

நித்யானந்தா பற்றி எழுதலாம் என்று பார்த்தல்
அவர் பற்றி வேட்டைக்காரன் படத்திற்கு பிறகு ரொம்ப நாள் ஓடுற வலை தலைப்பு நித்தி மட்டுமே

சரி நாமும் நித்தி பற்றி ஒரு சின்ன பதிவு


அவரும் டோரா போற மலை வாழ் ஒசாமா மாதிரி வீடியோ ரிலிஸ் பண்றார்

நான் அவன் இல்லைங்கோ என்று அவர் கூவுற ஸ்டைல் பார்த்தா

மன்மதன் படத்தில் வர்ற சிம்பு மாதிரி அவன் எனக்கு ஒரு தம்பி இருக்கான் அவன்தான் ரஞ்சிதா உடன் இருந்தான் என்று சொன்னாலும் சொல்வார் போல

நல்ல வேலை இந்த வீடியோ சன் டிவில வந்தது இல்லை என்றல் அவரிடம் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தை கொண்டு தன்னை நல்லவர் என்று நிருபிதாலும் நிரூபிப்பார்


நித்தி தன் சார்ந்த மதத்தை ஏமாற்ற வில்லை அவரை இன்னும் நம்பும் அவரின் பக்தர்களை தான் ஏமாற்றி உள்ளார்

பணம் இல்லாத வாழ்க்கையில் ,தன்னம்பிகை இல்லாத மக்கள் தான் அடுத்தவரை நம்பி வாழ வேண்டும்

கடவுளை நம்புவது நம்பிக்கை அது உலகம் முழுவதும் உள்ளது
அது நாசாவில் பனி புரியும் விஞ்ஞானி ஆகா இருந்தாலும் சரி
கிராமத்து படிக்காத பாமாரனாக இருந்தாலும் சரி

ஆனால் தனி மனிதனை நம்பி அவன் உபதேசங்களை நம்பி அவனிடம் நாம் நேர்மையாக சம்பாதித்த பணத்தை அவன் குறுக்கு வழியில் சுகம் பார்க்க கொடுப்பது பெற்ற தாயை பட்டினி போட்டு பாவத்தை சம்பாதிப்பது போல்

கடவுள் நம்பிக்கை வேண்டாம் என்று சொல்ல வில்லை இது போன்ற புல்லுரிவிகளின் பேச்சை நம்பி நம்மை நாமே முட்டாள் ஆக்கி கொள்ள வேண்டாம் என்று சொல்கிறேன்


பராசக்தி படத்தில் வரும் வசனம் போல்
" கோவில் வேண்டாம் என்று சொல்ல வில்லை ஆனால் கோவில் புல்லுரிவிகளின் கூடாரம் ஆகா மாற வேண்டாம் என்று சொல்கிறேன் "


இது போன்று ஏமாற்றுபவர்களுக்கு நூறு ருபாய் தருவதை விட நம் கண்ணுக்கு முன் கஷ்ட படும் ஒரு நல்லவருக்கு ஒரு ருபாய் கொடுத்து பாருங்கள் அன்று நிம்மதியாக தூக்கம் வரும்


               பதிவு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை மறக்காமல் இடவும்
                    பதிவு நாலு பேரை சென்றடைய உதவியாக இருக்கும்  

5 comments:

  1. இந்துக்களுக்குத்தான் மற்ற மதத்தவரை விட அதிகமான கடவுள்கள் இருக்கே, பின்னர் எதற்கு இந்த மனித வழிபாடு ? நீங்கள் சொல்வதுபோல இயலாதவகளுக்கு கொடுப்பது சால சிறந்தது.

    ReplyDelete
  2. //இது போன்று ஏமாற்றுபவர்களுக்கு நூறு ருபாய் தருவதை விட நம் கண்ணுக்கு முன் கஷ்ட படும் ஒரு நல்லவருக்கு ஒரு ருபாய் கொடுத்து பாருங்கள் அன்று நிம்மதியாக தூக்கம் வரும்//

    ச‌ரியா சொன்னிங்க‌!

    ReplyDelete
  3. ஒரு தமிழ் பதிவராக இருந்து கொண்டு இது நாள் வரையிலும் ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த ஸ்வாமிகளைப் பற்றி பதிவு போடாத உமக்கு கருடபுராணப்படி நூறு ஆண்டுகள் சாமியாராக (ரஞ்சிதா வேண்டாம், வேறு ஒரு நல்ல சினிமாக்காரியுடன்) பெங்களூருவில் வாழ சாபம் கொடுக்கிறேன்.
    ஸ்கந்தஸ்வாமியார்

    ReplyDelete
  4. @எப்பூடி .
    உங்கள் வருகைக்கு நன்றி.எப்பூடி
    @ர‌கு
    உங்கள் போன்றோரின் பின்னுட்டம் தேவை
    @Dr.P.Kandaswamy
    வணக்கம் தாத்தா நீங்கள் வயதில் வேண்டும் ஆனால் முதுமை தெரியலாம்
    உங்கள் எழுத்து இன்னும் YOUTH

    கலக்குங்க சார்

    ReplyDelete
  5. இது போன்று ஏமாற்றுபவர்களுக்கு நூறு ருபாய் தருவதை விட நம் கண்ணுக்கு முன் கஷ்ட படும் ஒரு நல்லவருக்கு ஒரு ருபாய் கொடுத்து பாருங்கள் அன்று நிம்மதியாக தூக்கம் வரும்

    நல்ல வரிகள்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை