Sunday, January 30

பிப்ரவரி மாத படங்களும் @ கலக்கல் சினி செய்திகளும்



யுத்தம் செய்
  பிப்ரவரி மாத படங்களில் மூன்று படங்கள் வருகிறது இதில் வெற்றி பட கம்பனி மற்றும் தமிழ் திரை உலகில் சொல்லும்படியான நிறுவனங்களில் ஒன்றான கல்பாத்தி எஸ் அகோரம் அவர்களின் தயாரிப்பில்
தமிழ் திரை உலகில் சொல்லும்படியான இயக்குனர்    மிஸ்கின் மற்றும் சேரன் முதலாமவர் இயக்கத்தில் இரண்டாமவர் நடிப்பில் ஒரு ஆக்சன் படமாக வருகிறது யுத்தம் செய் படத்தின் விளம்பரங்கள் பார்க்கும் போது இந்த படத்திற்கு ஒரு  எதிர்பார்ப்பு உள்ளது பார்க்கலாம் வெற்றி நிலவரம் எப்படி என்று
(
ரீமேக் படமாக மற்றும் சுட்ட கதையாக இல்லாமல் உண்மையான வெற்றி படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் )
பிப்ரவரி 4 முதல்  திரை அரங்கில் யுத்தம்   செய்ய    வரும் படம்

 
தூங்கா  நகரம் 
 

  
மதுரை பீவர் தமிழ் சினிமா  பீல்டை இந்த அளவிற்கு பாடு படுத்துகிறது மீண்டும் ஒரு மதுரை சார்ந்த கதை மதுரை தயாரிப்பாளர் (அதான் தயாநிதி அழகிரி )
 
தமிழ் நாட்டில் 24  மணி நேரமும் சுறு சுறுப்பாக இருக்கும் நகரம் மதுரை அதை கதை கருவாக கொண்ட படமிது
களவாணி ஹிட் படத்திற்கு பின்பு விமல் நடிக்கும் படம் இந்த படமும் ஹிட் ஆனால் தமிழ் சினிமாவில் அதிக அளவில் சம்பளம் கேட்டும் நடிகர் தயார்

 
இந்த படம் வரும் தேதி பிப்ரவரி


கோ  
 

   
தமிழ் சினிமாவில் ப்ளாக் பஸ்டர் படம் அயன் கொடுத்த பின்பு வரும் படம் சிம்பு முதலில் நடிப்பதாக இருந்து பின்பு ஜீவா கையில் சென்ற படம்
  
பத்திரிக்கை  புகைப்பட கலைஞர் கதை நிச்சயம் இந்த படம் ஹிட் ஆகும் என வாழ்த்துவோம்
படத்தில் சிறப்பு விஷயம் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் ஒரு காட்சியில்  வருகிறார்  (ஹாரிஸ் ரசிகர்களுக்கு சந்தோசமான செய்தி)
இந்த் படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி ஒவ்வொரு தமிழ்   ரசிகர்களை கவரும் பாடல்கள் ஹாரிஸ் மீண்டும் ராக் திஸ் ஆல்பம்  (கிங் ஆப் ஆல்பம் பாட்டு "ஏதோ எண்ணம் திரளது") 
பாடல்கள் பற்றி தனி பதிவு விரைவில்
 
ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்கள் கூட மிக முக்கியம் அந்த வகையில்   இந்த படத்தின் பாடல்கள் நூறு சதம் இந்த் படத்தின் வெற்றிக்கு உதவும்
பிப்ரவரி மாதம்   வரும் என தெரிகிறது ஆனால் தேதி மாற கூட வாய்ப்பு உள்ளது

கலக்கல் சினி மினி :
       
ரஜினி அவர்களின் எந்திரன் இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பட்டை கிளப்பியது தெரிந்த செய்தி இப்போ இந்த படம் ஆர்டிக் பிரதேசத்தில் திரம்சோ உலக பட விழாவில்  திரையிடப்படுகிறது
 
அதாவது முதல் இந்திய படம் இந்த எந்திரன் இந்த உலக பட விழாவில்

ரஜினியின் ராணா :
              
இந்திய அளவில் வசூல் சாதனை செய்ய அடுத்த ஆட்டம் ஆட தயாராகிவிட்டார் இந்தியாவின் ஓன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினி
      
இதில் எனக்கு சந்தோஷம் தரும் செய்தி ரஹ்மான் மீண்டும் இசை
(
ரஹ்மான் சார் இந்த் ஆண்டு முழுவதும் திரைப்படங்களுக்கு இசை அமைக்க மாட்டேன் குடும்பத்துடன் பொழுது  கழிக்க போகிறேன் என சொல்லி விட்டு இப்போ மும்பை மன்கீஸ் ,சென்னையில் ஒரு மழைகாலம் ,இப்போ ராணா அப்போ நீங்க சொன்ன அந்த விஷயம் பொய்யா?)
3 இடியட்ஸ் படத்தில்  சூர்யா இல்லை 
   மிகவும் நல்ல  செய்தி சூர்யா ரசிகர்களுக்கு  
                      சூர்யா உங்களிடம் புதுமையான கதைகள் மட்டுமே எதிர்பார்க்கிறோம் யாரோ ஒருவர் இயக்கி நிச்சயம் ஹிட் ஆகும் என்ற படத்தில் நடித்து மீண்டும் ஹிட் கொடுப்பதில் என்ன த்ரில் இருக்கு
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் எல்லாம் புது கதையில் நடிக்க பயந்து ஏற்கனவே அடுத்தவன் ஹிட் கொடுத்த படத்தில் நடித்து ஹிட் கொடுக்கும் காலத்தில் நீங்களும் இது போல செய்ய வேணாம் உங்களிடம் புதுமையான கதைகள் உள்ள படங்கள் எதிர்பார்க்கிறோம் ஏழாம் அறிவு மாற்றான் அயன்  போல தமிழ் சினிமாவில் திறமையுள்ள கலைஞர்களில் நீங்களும் ஒருவர் ரீமேக் படங்கள் நடித்து உங்கள் தரத்தை குறைத்து கொள்ள வேணாம் (தமிழ் திரை உலகின் தரமும் சேர்த்து )

AJITH BILLA 2
   இனிமேல் சினிமா மட்டும் என் குறிக்கோள் என சொல்லிய அஜித் மங்காத்தா படபிடிப்பு போகும் வேலையில் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிவிட்டார்  பில்லா 2 இந்த படத்திற்கு இந்தியாவில் யாரும் பயன்படுத்தாத கேமெரா  பயன்படும் என தவகல் வருகிறது படம் எப்படி இருக்கும் என பார்க்கலாம்

   
இப்போ இருக்கும் நடிகர்கள் எல்லாம் ஆந்திராவில் மலையாளத்தில் என்த  படம் ஹிட் ஆகிறது என்று பார்பதே முக்கிய வேலையாக உள்ளது (ரிஸ்க் எடுக்க இப்போ யாரும் விரும்பவதில்லை அவர்களுக்கு தேவை எப்படியும் வெற்றி மட்டுமே )
  
இப்படியே போனா ரீமேக் படங்களின் விலையே பெரிய  அளவில் இருக்கும்


           
தமிழ் வளர்த்தோம் தமிழர்களை  அழித்து
 
என்ன கொடுமை சார் இது தமிழ் வளர்ப்பதை விட தமிழர்கள் வளர யோசியுங்கள்
கடல் கடந்து வாழும் தமிழர்கள் விரும்பவது தன் தாய் கூட்டில் வாழ தான்
(
அந்நிய நாட்டில்  தங்கத்திலே வீடு  கொடுத்தலும் கூட )
ரீமேக் படங்கள் பற்றி நான் முன்பு எழுதிய பதிவை படிக்க இதை அழுத்தவும்

    
இந்த் பதிவு உங்களுக்குக் பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் பேஸ்புக் மூலம் உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்

                
மறக்காமல் வாக்களிக்கவும்
                             :
எல்லாம் தேர்தல் நேரம் வேற வழி:

  
 

Thursday, January 27

ஒரு ரஹ்மான் ரசிகனின் இளையராஜா பற்றிய பார்வை



     இளையராஜா இந்த பெயர் இல்லாமல் தமிழ் சினிமா என்றால் நிச்சயம் அது தமிழ் சினிமாவாக இருக்காது என்னதான்

இளையராஜாவை பிடிக்காது என்று இன்றைய காலத்தில் ஒருவர் சொன்னார் என்றால் அது நூறு சதம் பொய்யாக இருக்கும் தமிழ் சினிமாவில் ராஜாவின் பாடல் தினமும் ஒரு முறையாவது கேட்காதவன் நிச்சயம் இருக்க மாட்டான் (எனக்கு ரஹ்மான் அப்படின்னா ரொம்ப பிடிக்கும் ரஹ்மான் பாட்டை எந்த அளவிற்கு கேட்கிறேனோ அதை விட அதிக அளவில் ராஜா அவர்களின் பாடல்களை கேட்டு இருப்பேன் )

   இதற்க்கு முன்பு ராஜ அவர்களை பற்றி தவறாக பதிவை போட்டவன் இப்போ ஆஹா ஓஹோ என்று சொல்கிறானே என நீங்கள் கேட்கலாம் இதற்கும் காரணம் இருக்கு ராஜா அவர்களை பற்றி நான் எழுதும் போது கூட நண்பர் மாணவன் சொன்ன கருத்துக்கள் இப்போது நினைத்து பார்கிறேன் :
நண்பரே, நான் ராஜாவின் வெறியனாக இருபபதால் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்
சிம்பொனி இசைத்தொகுப்பின் உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் இருப்பதாக தகவல்...
மேஸ்ட்ரோ பட்டம் வேறு இசைக்காக வாங்கியது நண்பரே இதற்கும் சிம்பொனிக்கும் சம்மந்தமில்லை
ராஜா என்றுமே ராஜாதான் அவரின் சாதனைகளை பட்டியலிடமுடியாது ஏனென்றால் அவர் செய்த அனைத்து பாடல்களுமே சாதனைதான்....
இதை ராஜாவின் வெறியனாக இருப்பதால் சொல்லவில்லை அவரை விட அவரின் இசைதான் அதிகம் பேசியிருக்கும் என்பதை அவரின் இசையை கேட்டாலே புரியும்...
1976 அன்னக்கிளி திரைப்படம் மூலம் தனது இசை வாழ்வை தொடங்கி இன்று வரை இசைக்காகவே தன்னை அர்ப்பனித்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன்
அவரின் தமிழிசை உள்ளவரை ராஜா வாழ்ந்துகொண்டிருப்பார் இசை வேறு ராஜா வேறு இல்லை இரண்டுமே ஒன்றுதான்..

“நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே ராஜா ராஜாதான்”

வாய்ப்பிற்கு நன்றி
என்றும் நட்புடன்
மாணவன் (மேஸ்ட்ரோஸ் பேன்ஸ் கிளப்)
 
       நண்பர்களுடன் பேசி கொண்டு இருக்கும் போது தொலைக்காட்சியி அந்த ஒரு மணி நேரமும் இளையராஜா அவர்களின் பழைய பாடல்கள்
போய் கொண்டு இருந்ததது மூன்றாம் பிறை ,அன்னக்கிளி,ஜானி ,இன்னும் பல படங்கள் அந்த ஒரு மணி நேரமும் ஓடிய எந்த பாடலையும் சரி இல்லை என சொல்ல முடியாது இதுதான் ராஜா.

ராஜா சொன்ன சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை (ஏண்டா  அவர் மலை மாதிரி  நீ 
அப்படின்னு நீங்கள் சொல்றது எனக்கு கேட்கிறது )

 சரி இப்போ ராஜா அவர்களின் இசைக்கு வருவோம் தமிழ் திரை உலகின் பல படங்களுக்கு ஜீவனாக இருந்ததே ராஜா அவர்களின் பின்னணி இசை மட்டுமே திரை அரங்கில் சோகமான காட்சியை இன்னும் சோகமாக மற்றும் திறமை ராஜா அவர்களின் இசைக்கு மட்டுமே
         ராஜாவை பற்றி சொல்லும்போது இந்த பாட்டுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என எளிதில் சொல்ல முடியாது அதுதான் ராஜா அவர்களின் திறமை இல்லை அப்படி சொல்லித்தான் ஆவணும் என்றால் அதை பற்றி எழுதவே பல நூறு பதிவுகள் போட வரும்

 அதிலும் அவரின் முதல் படமான அன்னக்கிளி பாடல்களை கேட்க்க கேட்க்க ஒரு தனி சுகம் இப்போது வந்த ரஹ்மானின் 127 ஹவர்ஸ் பாடல் தொகுப்பை கேட்கிறேனோ அதே அளவில் ராஜா அவர்களின் பாடல்களையும் கேட்கிறேன்

    இளையராஜாவின் இசையை பற்றி பேசும்போது இசை எந்த அளவிற்கு என்னை கவர்ந்ததோ அதை விட அதிக அளவில்  என்னை கவர்ந்தத்தது ராஜா அவர்களின் குரல் சோகம் ,காதல் ,என அவர் பாடிய பாடல்கள் ஒரு பூபாளம்
தென்பாண்டி சீமையிலே இருக்கட்டும் இப்போது வந்த மச்சான் மச்சான்(சிலம்பாட்டம் ) ஆகா இருக்கட்டும் ராஜா அவர்களின் குரலில் இருக்கும்   கவரும் தன்மை வேறு எந்த பாடகருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே 



    1976 அன்னக்கிளி  2011 அய்யன் வரை உங்கள் இசை ராஜாங்கம் தொடர உங்களின் இசை மீது இருக்கும் ஆர்வம் மட்டுமே காரணம்
       உங்கள் பாடல்கள் பல கேட்ட ரசிகன் என்ற வகையில் 

உங்களுடைய அழகார் சாமின் குதிரைக்கு காத்திருக்கும் உங்கள் பாடல்களை ரசிக்கும் ரசிகன் 










ALSO READ 

சிறுத்தை சூப்பர் ஹிட் ,ஆடுகளம் ஹிட் ,காவலன் ?





    *******உங்கள் வோட்டையும் மறக்காமல் போடவும் ******

                          எல்லாம் தேர்தல் மாதிரி ஆகி விட்டது 



 

Wednesday, January 26

சிறுத்தை சூப்பர் ஹிட் ,ஆடுகளம் ஹிட் ,காவலன் ?



  இதற்கு முன்பு நான் எழுதிய
பாக்ஸ் ஆபீஸ் ஆடுகளம், சிறுத்தை டாப்  பதிவின் சாரம் அப்போது எதிர்த்து விஜய் ரசிகர்களுக்கு பதிலாக வந்துள்ளது இந்த  வார  பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் 



அப்போது நான் சொன்ன மாதிரி மனசு விட்ட சிரிக்க நல்ல படம் சிறுத்தை என எழுதி இருந்தேன் இப்போது அதை உண்மையாக்கி பாக்ஸ் ஆபிசில் முதல் இடத்தை பிடித்துள்ளது சிறுத்தை

 அதாவது கார்த்திக் ஒன்றும் மாஸ் ஹீரோ இல்லை அவர்க்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இல்லை தனக்கு பிடித்த ரசிகனுக்காக தன்னுடைய பணத்தை செலவு செய்து பல முறை படம் பார்க்கும் ரசிகன் இல்லை
இவை எல்லாவற்றிக்கும் மேல் அளவிற்கு மேல் சம்பளம் வாங்க வில்லை ஹீரோ மாஸ் காட்டி திரை அரங்கிற்கு கோடிக்கணக்கில் விற்க வில்லை அப்படியானால்  மாஸ் ஹீரோ படத்துடன் ஒப்பிடும் போது குறைந்த விலைக்கு விற்ற படம் இப்போது வசூலில் மாஸ் ஹீரோவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உள்ளது இதன் மூலம் சொல்ல வரும் கருத்து படத்தின் வெற்றிக்கு கதை மட்டும் காரணம் இல்லை கதை சொன்ன விதமும் கூட
அந்த வகையில் ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைத்த சிறுத்தை சூப்பர் 
    திரை அரங்கு வரும் ரசிகன் எல்லாவற்றிலும் எதிர்பார்ப்பது நல்ல பொழுது போக்கு மட்டுமே அவனுக்கு திரையில் காட்டும் ஹீரோயிசமும் சரி திரைக்கு வெளியே காட்டும் ஹீரோயிசமும் விரும்புவதில்லை
" காவலன் படம் இந்த அளவிற்கு பின்தங்க இவர்கள் சொல்லும் காரணம் விளம்பரம் இல்லை குறைவான திரை அரங்கு இது உண்மை என்றாலும் இவை எல்லாவற்றிக்கும் மேல் இந்த படத்திற்கு கிடைத்த இலவச விளம்பரம் எவ்வளவு இந்த் படம் பற்றி செய்திகள் எத்தனை "


 

     சரி மற்றோர் விசயத்திற்கு வருவோம் இதற்க்கு முன்பு வந்த சன் டிவியால் பலமுறை வரான் வரான் என வர வைத்த வேட்டைக்காரன் என்ன ஆனது இதை விட அதிக விளம்பரம் இதை விட அதிக திரை அரங்கு அப்படியானால் அந்த படம் ஓடம் சன் டிவி தான் காரணமா இல்லை விளம்பரம் என்ற விஷத்தை மீறி ரசிகன் விரும்பவது உண்மையான பொழுது போக்கு மட்டுமே 

    இதற்க்கு எடுத்து காட்டு  சன் பிக்சர்ஸ் வெளியிட்டில் வந்த அயன் ,சிங்கம் ,ஆடுகளம்  படங்களின் வெற்றி  


     இந்த படத்தின் முடிவுகள் மூலம் தமிழ் ரசிகர்கள் சொன்ன ஒரே விசயம் எங்களுக்கு தேவை நல்ல பொழுது போக்கு உள்ள படமும் திரை அரங்கில் கடுப்பு ஏற்றாத நல்ல கதை மட்டுமே (மைனா .மதாராசா பட்டினம் ,களவானி,)
  இப்படத்திற்கு எதிர்ப்பு என்று ரசிகர்கள் மத்தில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் தான் இந்த அளவிற்கு வெற்றி பெற காரணம் கூட 


   இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் படி விஜய் விட  குறைந்த சம்பளம் வாங்கும் விஜய் படத்தை விட குறைவாக விற்கபட்ட ஆனால் விஜய் படத்தை விட அதிக லாபம் கொடுத்த சிறுத்தை உண்மையில் சீரும் சிறுத்தை என்பதை நிருபித்து விட்டது

இதற்க்கு முன்பு வந்த பதிவில் சொன்ன மாதிரி "நீங்கள் ஜாலியா சந்தோசமா இருக்க வேணும் அப்படின்னா உங்களின் முதல் சாயிஸ் சிறுத்தை படமாக  இருக்க வேணும்

இப்போ இந்த வார பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெல்டன் கார்த்திக்
நன்றி :வெப் துனியா தமிழ்
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சென்ற வார இறுதியில் ஆடுகளத்தை இரண்டாமிடத்துக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது, கார்த்தியின் சிறுத்தை. வெளியானது முதல் மூன்றாவது இடத்திலேயே உள்ளது விஜய்யின் காவலன்.

காவலன் சென்ற வார இறுதியில் 47.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் மொத்த சென்னை வசூல், 1.51 கோடி.

இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஆடுகளம் சென்ற வார இறுதியில் 49.07 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான ஆடுகளத்தின் சென்னை வசூல், 1.70 கோடி.

சிறுத்தை சென்ற வார பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 62.51 லட்சங்கள். காவலன், ஆடுகளம் இரண்டையும்விட மிக மிக அதிகம். இதுவரையான சிறுத்தையின் சென்னை வசூல், 1.98 கோடி.  


இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த மூன்று படங்களில் அதிக விலைக்கு அதாவது ரூ . 40 கோடிக்கு  விற்கப்பட்ட காவலன் அதை விட மிக குறைந்த  விலையில் விற்கப்பட்ட சிறுத்தையும் சரி ஆடுகளமும் சரி அதிக அளவில் வருமானம் பார்கிறது இன்னும் பார்க்கும்
அப்படி எனில் குறைந்த குறைந்த முதலிடு போட்டு அதிக லாபம் எந்த படத்திற்கு கிடைக்கும் உண்மையில் சொல்வது என்றால் ஆடுகளமும் சரி சிறுத்தையும் சரி திரை அரங்க உரிமையாளருக்கு நல்ல லாபம் கொடுக்கும்
ஒரு படத்தை அதிக விலைக்கு விற்று விட்டால் மட்டும் லாபம் இல்லை அந்த படம் மூலம் கடைசி வரை லாபம் பார்க்கும் நிலை வருகிறதோ அதுவே உண்மையான வெற்றி சும்மா நீங்களோ நானோ வெற்றி என போடுவதில் வெற்றி வருவதில்லை

    திரை அரங்கு கம்மி விளம்பரம் இல்லை என்பது எல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கே அப்படி என்றால் போன வேட்டைக்காரன் ,சுறா படங்களுக்கு இதை விட அதிகம் விளம்பரம் செய்ததது சன் டிவி என்ன ஆனது நிலைமை

எது எப்படியோ ஒரு உண்மை யாரும் மறுக்க முடியாது :
நீங்க சம்பாதிச்ச  உங்களுக்கு நான் சம்பாதிச்ச  நம்ம  சாப்பாடுக்கு  நாம்தான் உழைக்க வேணும் யாரும் சும்மா தர மாட்டங்க
பிறகு என் இந்த பிரச்சினை எனக்கு ரஹ்மான் பிடிக்கும் அதற்காக உங்களுக்கும் பிடிக்க வேணும்  என சொல்ல மாட்டேன் ரஹ்மானிடம் குறை நீங்கள் சொன்னால் அப்படியா அப்படின்னு கேட்டுட்டு போவேன் அதற்காக வீம்பு செய்ய மாட்டேன்





இந்த பதிவின் சாரம் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான வாக்கை மறக்காமல் இடவும்

பேஸ்புக் மூலம் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்



 READ ALSO

இசைப்புயலின் ஆஸ்கர் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்



Tuesday, January 25

இசைப்புயலின் ஆஸ்கர் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்



    ரஹ்மானின் இசை இந்திய எல்லை தாண்டி உலக அளவில் கவர்ந்து ரஹ்மான் உலக நாயகன் ஆகிவிட்ட இந்த நேரத்தில் 


   ரஹ்மானின் புது ஆங்கில படமான 127  ஹவர்ஸ்  இசை உலக அளவில் இசை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த் நேரத்தில் ரஹ்மானின் உழைப்புக்கு மீண்டும் ஆஸ்கர் போட்டியில் ரஹ்மானின் இசை இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

   2009  ஷ்லம்டாக்  மில்லியனர் படத்திற்கு ஏற்கனவே இரண்டு
பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு இரண்டு பிரிவுகளிலும் வென்றார்
இந்த ஆண்டு மீண்டும் ரஹ்மானின் ஆஸ்கர் ஆட்டம் ஆரம்பம்
இந்த ஆண்டு ரஹ்மானுக்கு சரியான போட்டியாக (இன்சப்சன் ,மற்றும் சோசியல் நெட்வொர்க் )படங்கள் உள்ளன  



ரஹ்மான் நீங்கள் இந்த ஆண்டு மீண்டும் இரண்டு பிரிவுகளில் விருது பெற்று தமிழனையும் தமிழையும் மீண்டும் ஆஸ்கர் மேடயில் ஏற்றவும்

                                     இறைவன் உங்களுக்கு வெற்றியை தருவானாக 



போனஸ் செய்தி :

                       சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நடைபெறும் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  பெருமை மிக்க கிறிஸ்டல் விருதை பெறுகிறார்
உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் 11 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட 2500க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவில் ரஹ்மானும் சிறப்புரை ஆற்ற உள்ளார்

 ரஹ்மான் சார் உங்களுக்கு விருதுகளே எல்லை இல்லை உலக அளவில் உள்ள எல்லா விருதுகளும் உங்களுக்கே


   இந்திய இசையின் பெருமையை அளவில்
கொண்டு சென்ற நீ உண்மையான உலக நாயகன்

  நீங்க ஆஸ்கர் நாயகன் பற்றிய் என்ன நினைக்கிர்கள் மறக்காமல் உங்கள் கருத்தை சொல்லவும்

     இந்த பதிவு இன்னும் பலரை சென்றடைய உங்கள் வாக்குகளை மறக்காமல் இடவும்

               ஹாய் அரும்பாவூர்  பேஸ்புக் குழுவில் சேருங்கள் நண்பர்களுக்கு பகிரவும் 



READ ALSO

சிறுத்தை சூப்பர் ஹிட் ,ஆடுகளம் ஹிட் ,காவலன் ?

Monday, January 24

FILEHIPPO சிறந்த டவுன்லோட் இணையதளம்



  *எனக்கு யாஹூ மேசன்ஜெர் வேணும் ஆனால் புதுசு வேணாம் பழைய யாகூ மெசஞ்சர் வேணும் என்பவர்களுக்கும் சரி 

  *நான் என் கணினிக்கு எல்லாம் சிறந்த சாப்ட்வேர் வேணும் சிறந்த சாப்ட்வேர் பற்றி எதில் தெரிந்து கொள்வது என்பவருக்கும் சரி


  *எனக்கு நான் விரும்பும் சாப்ட்வேரின் புது பதிப்பு முதல் பழைய பதிப்பு வரை எல்லாம் ஒரே இடத்தில வேணும் என்பவர்களுக்கும் சரி 


  *நான் சில நேரங்களில் என் சாப்வேரை அப் டேட் செய்ய மறந்து விடுவேன் தானாக எனக்கு நினைவு படுத்த ஒரு நல்ல சாப்ட்வேர் வேணும் என சொல்பவர்களுக்கும் சரி

இன்னும் உங்களுக்கு என்ன என்ன வேணும் என நினைக்கிரிர்களோ எலாம் ஒரே இடத்தில கிடைக்கும் இடம்தான்   FILEHIPPO இணைய தளம் இந்த  இணைய தளம் பற்றி பலர் எழுதி இருந்தாலும் மீண்டும் நம் சார்பாக 


உங்களுக்கு எது மாதிரியான சாப்ட்வேர் வேண்டும் என்றாலும் இதில் கிடைக்கும் ஆண்டி வைரஸ் ,மெசேஜ் சாப்ட்வேர் ,ஆடியோ வீடியோ சாப்ட்வேர் , ஸ்கைப் ,ஜிமெயில் .யாஹூ ,என நீங்கள் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்கும் 



 கூடவே அப் டேட் செக்கர் உங்கள் கணினியில் நிறுவினால் உங்கள் கணினியில் நீங்கள் எந்த நேரத்தில் உங்கள் சாப்ட்வேர் அப் டேட் செய்ய வேணும் என்பதை நினைவு படுத்தும் 




  உங்கள் கணியில் புக் மார்க்கில் வைக்க வேண்டிய இணைய தளம் 



    




    



                                          DON'T MISS MY VOTE 

   இந்த பதிவு பிடித்து இருந்தால் மறக்கால் வாக்களிக்கவும் பேஸ்புக் மூலம் உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும் 

Thursday, January 20

நம்பரை மாற்றாமல் நெட்வொர்க்கை மாற்றலாம் விவரங்கள்



    எனக்கு இந்த நம்பர் வேணும் ஆனால் எனக்கு இந்த கம்பெனி வழங்கும் சேவை வேணாம் என புலம்புவர்களுக்கு சந்தோசமான ஒரு  செய்தி 

   நாம் விரும்பும் நிறுவனத்திற்கு நாம் விரும்பியபோது மாறி கொள்ளலாம் இந்த வசதி இன்று முதல் இந்திய முழுவதும் அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர்

  அப்பாடி இனிமேல் தொல்லை தரும்  கம்பெனியில் இருந்து நமக்கு பிடித்த தொலை தொடர்பு நிறுவனத்திற்கு மாறி கொள்ளலாம் 



    இதை பற்றி சில விவரங்கள் உங்களுக்காக
 1 . நாம் விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் முன் இப்போது நாம் பயன்படுத்தும் நிறுவனத்தில் ஏதும் கணக்கு வழக்குகள் நிலுவையில் இருக்க கூடாது (அதாவது இந்த் நிறுவனத்தில் பேசும் வரை பேசி விட்டு அடுத்த நிறுவனம் மாறலாம் என்று நினைக்க
இல்லை )
 
2 .உங்களுக்கு பிடிக்காத சரியான வசதிகள் இல்லாத தொலை தொடர்பு நிறுவனத்தில் இருந்து இனி தொல்லை இல்லாமல் எளிதில் மாறி கொள்ளலாம்


3 . நீங்கள் இந்த வசதிக்கு மாற வெறும் ருபாய் 19 மட்டுமே  இந்த் மாற்றம் நிகழ ஒரு வாரம் ஆகும் ,புதிய நிறுவனத்திற்கு மாறிய பின்பு மூன்று மாதத்திற்கு வேறு நிறுவனத்திற்கு மாற முடியாது 

 
4 .இந்த வசதிக்கு மாற முதலில் நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து "PORT "  ஆங்கிலத்தில் எழுதி இடம்(SPACE) விட்டு மொபைல் எண்ணுடன்   1900 என்ற எண்ணிற்கு எஸ் எம் எஸ் செய்ய வேண்டும் இதற்க்கு தொலை தொடர்பு துறை துறை ஒரு யுனி கோட்(
UPC - Unique Porting code) நம்பரை அனுப்பும்  அந்த எண்ணுடன் வாடிக்கையாளர் விரும்பும் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விண்ணப்பித்தால் சேவை நிறுவனம் மாற்றி தரப்படும் ,இதற்க்கு ருபாய் 19 கட்டணம் வசுலிக்கபடும்
5 .சேவை நிறுவனம் மாறும்போது இதற்க்கு முன்பு இருந்த தொகை மாறது 

 
6 .உங்கள் சர்வீஸ் எல்லைக்குள் மட்டுமே செல்போனே சேவை நிறுவனம் மாற்றி கொள்ள முடியும்
 இப்போ நீங்கள் உங்கள் விருப்பம் உள்ள நிறுவனத்திற்கு மாறுவது எளிது , இனிமேல் போட்டி
ஆரோக்கியமாக இருக்கும் என நினைக்கலாம்

* மேலே உள்ள விஷயங்கள் நான் படித்த வகையில் உங்களுக்காக எழுதியது எதற்கும் ஒரு முறை தொலை தொடர்பு நிறுவன விவரங்கள் அடங்கிய விவரங்களை ஒரு படித்து கொள்ளவும்
*  மேற்கொண்டு அதிகமான விவரங்களுக்கு அருகில் உள்ள மொபைல் சேவை நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்


        படித்த உடன் உங்கள் வாக்கை மறக்காமல் இடவும் இந்த தகவல் பல பேரை சென்றைய உங்கள் வாக்குகள் உதவும்
             பேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு சொல்லவும்

Wednesday, January 19

A.R.ரஹ்மான் ஐஸ்வர்யா ராய் நடித்த டூயட் வீடியோ பாடல்



        இன்று ரஹ்மான் தன்னுடைய அதிகாரபூர்வ பேஸ்புக் மூலம் தன்னுடைய புது பாடல் வீடியோ வெளியுட்டுள்ளார் முதலில் ஒரு நிமிடம் நம்ப முடியவில்லை நம்ம ரஹ்மான ஐஸ்வர்யா உடன் ஒரு காதல் பாடல் வீடியோ ,ரஹ்மான் ஒரு கலக்கல் ஹீரோ போல இருக்கார்
    ராவணன் படத்தில் வந்த நானே வருவேன் பாடலை சில அதிகப்படியான காட்சிகள் எடுத்து அழகான ஒரு வீடியோ ஆல்பம் கொடுத்துள்ளார் ரஹ்மான்

       ரஹ்மான் ஆரம்பத்தில் ஒரு ஆக்சன் ஹீரோ கணக்காக ஹெலிகாப்டரில் வரும் காட்சி வாவ் ரஹ்மான் கலக்கிட்டிங்க
   ஐஸ்வர்யாவை ஓநாய்கள் துரத்தும் காட்சி என சில அதிகப்படியான காட்சிகள் இணைத்து ஒரு திர்ல்லர் காதல் என எல்லாம் கலந்து கொடுத்து கலக்கி இருக்கிறார் ரஹ்மான்

    ஐஸ்வர்யா மிகவும் அழகாக நடித்து உள்ளார் . ஒரு உலக தரமான ஆல்பம் போல உள்ளது இந்த் சேஞ்சிங் சீசன்  ஆல்பம் மறக்காம ரஹ்மான் நடிப்பை பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் 






         இந்த நேரத்தில் சில ரஹ்மான் துனுக்க்ஸ் :
     ரஹ்மான் லண்டன் நகரில் வழங்கப்படும் BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்
    ரஹ்மான் பேஸ்புக் தொடர்பவர்கள் 28 லட்சத்தை தாண்டி விட்டது 

 
    இந்தியாவில் எந்த கலைஞருக்கும் இந்த  அளவிற்கு  தொடர்பவர்கள் இல்லை  (அப்படி இருந்தால் ஆதாரத்துடன் சொல்லவும் )

 என் போன பதிவில் ஏன் காவலன் படம் பற்றி எழுதவில்லை என கேட்டவர்களுக்கு ஒரே பதில் காவலன் படம் பற்றி எழுதினால் கேவலமாக பின்னுட்டம் இடுபவர்கள் இருக்கிறார்கள்  அவர்களின்  பின்னுட்டத்திற்கு பயந்தே விஜய் பற்றி அதிகம் எழுத வில்லை (கேவலமாக எழுதுவது  என்று விஜய்  ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள் ,சில நல்ல ரசிகர்கள் மன்னிக்கவும் )

மற்றபடி எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்னை இல்லை விஜய் படங்கள் தொடர்ச்சியாக வெறித்தனமாக பார்த்தவன் ஒரு காலத்தில் (
தன் அப்பாவின் ஆசைக்காக  ,பல  அப்பாவி அப்பாக்களின் மகன்களை பலிகடா ஆக்க பார்க்கும் அவரின் அரசியல்தனமான விஜய் என்பவரைத்தான் பிடிக்கவில்லை  )


 இந்த  பதிவை படிப்பது மட்டும் இல்லாமல் மறக்காமல் ஒட்டு போடுங்க சார்

 பேஸ்புக் மூலம் உங்கள்
நண்பர்களுக்கு பகிரவும்


Tuesday, January 18

பாக்ஸ் ஆபீஸ் ஆடுகளம் ,சிறுத்தை டாப்



 
       பொங்கல் படங்களில் ஆடுகளமும் சரி ,சிறுத்தை படமும் சரி திரை அரங்க உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு சந்தோஷம் தரும் படமாக அமைந்து உள்ளது 



       இந்த இரண்டு படமும் சரி பார்த்த வகையிலும் சரி இது வரை வந்த விமர்சனமும்  சரி  வரும் காலங்களில் இன்னும் திரை அரங்கில் அதிகம் படம் பார்க்க ரசிகர்கள் அதிகம் வருவார்கள் என நினைக்கிறேன்

   நீங்கள் நம்பி பார்க்க இரண்டு படமும் சரி நிச்சயம் உத்ரவாதம்

 ஆடுகளம் தமிழ் திரை உலகில் சொல்லும் படியான படங்கள் என்ற வரிசையில் அமைந்து விட்டது தரமான படங்கள் விமர்சனம் மட்டும் சம்பாதிக்கும் வருமானம் குறைவாக் இருக்கும் என்ற கருத்தை பொய்யாக்கி
 தமிழ் ரசிகர்கள் இது போன்ற தரமான படங்களை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்குவார்கள் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் நிருபித்த  படம்
  தமிழ் திரை உலகில் காவியம் இந்த  ஆடுகளம்
(ஆடுகளம் விமர்சனம் படித்தவரையில் நண்பர்கள் சொன்ன வகையில் தரமான பட
ம் 100 %)

    சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படங்களில் தரமான படம் ஆடுகளம்


 அடுத்த படம் திரை அரங்கு போனோம் நல்ல மனம் விட்டு சிரித்தோம்  நாம் கொடுத்த காசுக்கு சரியான படம் என்று சொல்ல
வைத்த படம் சிறுத்தை
 உண்மை சொல்ல வேண்டும்  என்றால் ஒரிஜினல் படமான விக்ரமடுவை விட சிறுத்தை சூப்பர் 
வாய் விட்டு சிரிக்க நகைச்சுவை படம் ,உடம்பு சூடேற்றும் ஆக்சன் படம் ,நல்ல பொழுது போக்கு படம்

 இரட்டை வேடம் என்றால் போடும் சட்டைகள் கலரை மட்டும் மாற்றி போட்டால் போதும் என்ற நடிகர்களுக்கு மத்தியில்
ராக்கெட் ராஜ ரகளை காமெடியன் அதற்க்கு  மறு உருவமாக மிடுக்காக ரத்தினவேல் பாண்டியன்
 சந்தானம் இந்த் படம் மறக்க முடியாத படம் 
 இந்த படத்தின் ஆரம்பத்தில் சொல்வது போல கதை ஆந்திர மாநிலத்தில் நடந்தாலும் ரசிகனின் புரிதலுக்காக கதாபாத்திரம் தமிழ் பேசும் என்று
  அதே போல இரண்டு மணி நேரம் சந்தோசமாக இருக்க  என்று நீங்கள் நினைத்தால் தைரியமாக சிறுத்தை போகலாம்  சிரித்து சிரித்து உங்கள் மனம் சந்தோஷம் ஆகும் சிரிப்புக்கு
உத்ரவாதம் இந்த சிறுத்தை
  நீங்கள் கொடுக்கும் காசுக்கு திட்டாமல் நல்ல படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த இந்த   படங்களை உத்தரவாதமாக சொல்லலாம் 

       இந்த இரண்டு படங்கள் பற்றி நல்ல விதமாக சொன்னவர்கள் யாரும் அவர்களின் ரசிகர்கள் இல்லை நல்ல படம் வந்தால் பார்க்கும் சராசரி ரசிகன் மட்டுமே

        பொங்கல் படங்களில் நீங்கள்  நல்ல படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கொடுக்கும் காசுக்கு மதிப்பு வேண்டும்  என்றால் துணிந்து ஆடுகளம் ,மற்றும் சிறுத்தை பார்க்கலாம்

                                                       வெல்டன் தனுஷ் ,கார்த்திக்

 இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்

                                                     

        இந்த பதிவு பற்றி உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்



 
 

Saturday, January 15

A.R.ரஹ்மான் 127 hours அமெரிக்காவின் கிரிடிக்ஸ் சாயிஸ் விருது சிறந்த பாடல்



     ரஹ்மானுக்கு இந்த   ஆண்டின் முதல் உலக விருது  அதுவும் அவரின் உலக அளவில் இசை விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட 127 hours  ஏற்கனவே கோல்டன் க்ளோப்  விருதுக்கு 
பரிந்துரைக்கப்பட்டுள்ளது 


 இதில் If I Rise" - performed by Dido and A.R. Rahman/music by A.R. Rahman/lyrics by Dido Armstrong and Rollo Armstrong - 127 Hours  என்ற  பாடலுக்கு ரஹ்மான் இந்த் விருதை பெற்றுள்ளார்   



    கோல்டன் க்ளோப் விருது வழங்க இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இன்று அமெரிக்காவில் வழங்கப்பட்ட 16thகிரிடிக்ஸ் சாயிஸ் விருதில் ரஹ்மானின் பெயர்  இரண்டு பிருவுகளில் பரிந்துரைக்கப்பட்டு அதில் சிறந்த பாடல் பிரவில் ரஹ்மான் அவர்கள் இந்த விருதை பெற்று இருக்கிறார்

2008யில் இதே போல இரண்டு பிரிவுகளில்  பரிந்துரைக்கப்பட்டு சிறந்த இசைக்கு விருது பெற்றார் (ஸ்லம்டாக் மில்லியனர் )
இந்த ஆண்டு அதே போல் இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த பாடலுக்கு விருதை பெற்றுள்ளார்
A.R.ரஹ்மான் சார் உங்கள் உலக பயணத்தில் இன்னும் பல வெற்றி பெற வாழ்த்துக்கள் 


  
 

                  "இந்த ஆண்டின் முதல் கமர்ஷியல் ஹிட் சிறுத்தைக்கு வாழ்த்துக்கள் "  
ஆனால் தொடர்ந்து இதை போல கமர்ஷியல் படங்களில் நடிக்காமல் நல்ல கதை உள்ள படங்களிலும் நடிக்கவும் நல்ல படம் எது வந்தாலும் பார்க்க நினைக்கும் ரசிகன் சார்பில்

Friday, January 14

ரசிகனை மதிப்பவனுக்கும் என்றும் வெற்றியே (ஆடுகளம் தொகுப்பு )





  எப்படியோ தனுஷ் தொடர் வெற்றி மற்றும் நடிப்பு உள்ள சிறந்த நடிகர்களில் ஒருவராக ஆடுகளம் உள்ளம் நிருப்பித்து விட்டார் 


  இதே அமைதியுடன் போங்க தனுஷ் உங்களுக்கு தொடர் வெற்றிதான்

    ரசிகனை உசுப்பேற்றி அவன் தன மீது கொள்ளும் நம்பிக்கையை தன உழைப்புக்கு பயன்படுத்தும் நடிகர்கள் இடையில் தனக்கேற்ற நடிப்பு திறமை உள்ள படங்கள் தேர்ந்துடுத்து
 தனக்கும் சரி தன்னை நம்பி வரும் ரசிகனுக்கும் சரி படத்தை வாங்கும் திரை அரங்க உரிமையாளர் விநியோகஸ்தர் என மினிமம் சந்தோஷம் தரும் தனுஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

     தனுஷ் எப்படியோ இந்த பொங்கலில் முதல் வெற்றி படம் உங்கள் படமாக அமைந்தது வாழ்த்துக்கள்

    ஒரு படத்திற்கு வரும் விமர்சனம் ஒன்று இரண்டு ஒரே மாதிரி இருப்பதை விட எல்லா விமர்சனமும் சரி படம் பார்த்த என் நண்பர்களும் சரி சொன்ன வார்த்தை படம் சூப்பர்

 தமிழ் ரசிகர்கள் மசாலா
நிறைந்த கதையும் ஏற்பார்கள்,அதே நேரம் இது போன்ற கதை உள்ள படங்களையும் ஏற்பார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு ஆடுகளம் மற்றும் சிறுத்தை பற்றி வரும் விமர்சனங்கள்

தனுஷ் ஒரு படத்தில் சொல்லி இருப்பார் எங்களை போன்றவர்களை பார்த்தா பிடிக்காது பார்க்க பார்க்க பிடிக்கும் என்று நிருப்பித்து விட்டிற்கள் தனுஷ்

சன் டிவி வெளியிடுகளில் தரமான படங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது சிறப்பு

(தனி நபர் புகழ் படங்களை சில ரசிகர்கள் மட்டும் மட்டுமே ரசிகர்கள் அதுவும் சில நாட்கள் மட்டுமே )

எல்லாவற்றிக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது மாதிரி அவர்க்கு ஒரு முள்ளும் மலரும் தனுசுக்கு ஆடுகளம்

 

மற்றும் நான் படித்த சில பதிவர்களின் விமர்சனம்
சில காப்பி செய்து இங்கே போட்டுள்ளேன் நன்றி

அட்ரா சக்க :


சேவல் சண்டையை மையமாக வைத்து ஒரு கிராமியக்கதையை இவ்வளவு சுவராஸ்யமாய் எடுக்க முடியும் என்று நிரூபித்ததற்காகவே இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.பொல்லாதவன் படத்துக்குப்பிறகு இயக்குநர் வெற்றி மாறனுக்கு கிடைத்த பொங்கல் ஹிட்டு.

செங்கோவி :

பிட்ச்சை ரெடி பண்ணுவதிலேயே முதல் பாதி போய்விடுகிறது. ஆனாலும் இடைவேளைக்கு முந்திய அரைமணி நேரத்தில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு, இறுதி வரை தொடர்கிறது.

தனுஷ் மதுரைக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். பொல்லாதவன் போலவே, பஞ்ச் டயலாக் பேசாமல் டைரக்டர் சொல்படி கேட்டு நடித்திருக்கிறார்.  நாயகி டாப்ஸி அழகான பொம்மை போல் இருக்கிறார். வருங்காலத்தில் நடிக்கலாம். ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாகப் பொருந்திப்போகிறார்
 

கவிதை வீதி :
                அனைவரின் யாதார்த்த நடிப்பு, குறிப்பாக தனுஷ், இலங்கை கவிஞர் ஜெயபாலன் ஆகியோரின் நடிப்பு கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர்.

கதையோடு ஒன்றியே வரும் பாடல்கள்
பின்னனி இசை
யதார்த்தமான சண்டை காட்சிகள்
வசனம் (பயம் எங்களுக்கா நாங்க சுனாமிலேயே சும்மிங் போடுரவாங்க, சும்மாபேசிகிட்டே இருந்த கொண்டேபுடுவேன், நாங்கலெல்லாம் அம்பானிக்கே அட்வைஸ் பண்றவங்க போன்ற வசங்களில் தனுஷிக்கு தைதட்டல்)
கடைசியாக ரசிகனுக்காக படம் எடுபவனுக்கு என்றும் வெற்றி கிடைக்கும் ரசிகனை பகடை காய் ஆக்கி தன் சுகம் மட்டும் பார்க்க நினைக்கும் எவனுக்கும் ஆப்புதான் .
உங்களுக்காக படம் எடுப்பதை விட திரை அரங்கு வரும் ரசிகன் பொழுது போக்க படம் எடுங்க சார்

 

Tuesday, January 11

என்னத்தான் சொல்ல வர்றிங்க நீங்க ?

      
 அஜித் மற்றும் விஜய் இடம் :
                       நாங்கள் இரண்டு பேரும் நண்பர்கள் என்று  பிரியாணி வைத்து விருந்து
வைத்திர்கள் சந்தோஷம்  
அப்புறம் ஏன்  சினிமாவில் நீங்க இவரை திட்டியும் அவர் உங்களையும் திட்டியும் ரசிகனை சூடேற்றி
வருமானம் பார்க்க திரையில் திட்டுவது        இப்போ எங்கே இருந்து இந்த திடீர் பாசம்
ரசிகன் முட்டாள் ஆகா இருப்பான் என்றா ?  இனிமேலும் ரசிகனை ஏமாற்ற முடியாது என்றா ?

  சீமானிடம் :
                             ஈழத்தமிழர்  விசயத்தில் தமிழர்க்கு தீங்கு செய்த காங்கிரஸ் ,திமுக தோற்க வேண்டும்  எனவே ஆதிமுகாவுக்கு வோட்டளிக்கவும்
   
                  உங்களுடைய உண்மையான ஆசை என்ன திமுக தோற்பதா  இல்லை ஆதிமுக ஜெயிப்பதா ?
 எரியற கொள்ளியில நல்ல கொள்ளி எது சார் !



கமல் ஹாசன் இடம் :

  எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜாவுக்கு பிறகு தமிழ் சினிமா இசையின் சிம்மாசனம் காலியாகவே  இருக்கு. தேவிஸ்ரீ பிரசாத் அந்த இடத்துக்கு வர வாய்ப்பு இருக்கு

     பொறமை பட ஒரு அளவு இருக்கு இருந்தாலும் பேரில் மட்டுமே ஆஸ்கரையும்  உலக நாயகனையும் வைத்து இருக்கோம்
 ரஹ்மான் அதை உண்மையாக்கி இரண்டையும் சாதித்த பொறாமையா சார் ?




    பதிவை படிக்கும் ரசிகர்கள் இடம் :
                        பொங்கலுக்கு எந்த படத்தை முதலில் பார்க்க போறீங்க  திரை அரங்கிலா இல்ல விரைவில் போட போகும்
தொலைக்காட்சியிலா ?


      


Sunday, January 9

இப்படி ஒரு வேட்பாளர் வேண்டும் பகுதி 2

 
  சவி ராஜாவத் போல பத்து பேர் வந்தால் தமிழ் நாட்டில் நல்ல மாற்றம் வரும் (வீடியோ)

      இப்படி  ஒரு வேட்பாளர் வேண்டும் பகுதி 1  உங்களின் ஆதரவுக்கு நன்றி அதே நேரம் தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளன அதாவது 


                                        சவி ராஜாவத்

  நம் தலை எழுத்து நம்மை யார் யாரோ ஆட்சி செய்யும் போது அவர்கள் நான் இதை செய்வேன் இதை செய்வேன் என்று வெட்டி பந்தா காட்டி  நம்மை ஏமாற்றும் இவர்களுக்கு மத்தியில்
   அந்த காலத்தில் வாழ்ந்த கக்கன் காமராஜர் போன்றோர் வேண்டும் என்று சொல்ல வேண்டும் ஆனால் அப்படி சொல்வதை  விட இப்போ நம் கண்ணுக்கு எதிரில் மக்களுக்கு வாழும் மக்களுக்கு உண்மையாக வாழும் சவி ராஜாவத் போன்ற வேட்பாளர்கள் வேண்டும் 


மக்களுடன் சவி ராஜாவத் 



   இவரை பற்றிய விஷயங்கள்  நான் படித்தது மற்றும் உதவி செய்தது THANKS: விகடன் ,IBN LOKMAT, INDIA TIMES

சவி ராஜாவத் என்கிற 30 வயது இளம்பெண். எம்.பி.ஏ. படித்திருக்கும் இந்தப் பெண், ராஜஸ்தானின் பின்தங்கிய பகுதியான டோங் மாவட்டத்தின், சோடா  என்னும் கிராமத்தில் பிறந்தவர்
   ஷாருக் கான் படமான ஸ்வதேஷ் (தமிழில் :தேசம் ) படத்தில் வருவது போல தன்னுடைய மிக பெரும் நிறுவன வேலையே விட்டு விட்டு கிரமா மக்களுக்காக உழைக்கக் வந்தார்

  மக்களை ஏமாற்றி சம்பாதிக்க வரவில்லை  அரசியலுக்க வந்த விசயத்தை விட  பாராட்ட வேனித்யா மற்றும் ஒரு விஷயம் அவரின் உண்மையான உழைப்புக்கு ஆதரவளித்து ஓட்டளித்த அந்த மக்களை சொல்ல வேண்டும்
  (இன்னும் எம் ஜி ஆருக்கு வோட்டு போடுவேன் கருணாநிதிக்கு ஒட்டு போடுவேன் ,ரஜினிக்கு ஒட்டு போடுவேன் இவை எல்லாவற்றிக்கும் மேல் இலவசம் என்றால் பிச்சைக்காரன் போல தேடி வோட்டு போடும் ஈன நிலை மாறினால் மட்டுமே உண்டு )
   சவி ராஜாவத்  இளம்பெண். எம்.பி.ஏ. படித்துவிட்டோம் என்று நினைக்காமல் அரசியல் படிக்காதவர்களுக்கு என்று நினைக்காமல் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற நினைப்பே அவரின் உண்மையான தன்னம்பிக்கை
 தன்னுடைய படிப்பு அறிவை வியாபார நிறுவனங்களுக்கு பயன்படுத்தி தான் மட்டும் தன குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்று நினைக்காமல் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று நினைத்த சவி ராஜாவைத் வாழ்க 

 சவி ராஜாவத் பற்றிய வீடியோ



  தமிழ் நாட்டில் சவி ராஜாவைத் போல மக்களுக்கு உழைக்க வேண்டும் மக்களை ஏமாற்றாமல் அரசியல் செய்து தமிழ் நாட்டை இந்தியாவில் முதல் மாநிலம் ஆக்க நினைக்க வேண்டும் என்று எத்தனையோ நல்ல உள்ளங்கள் உள்ளன
   ஆனால் அவர்களுக்கு ஆதரவு தர நம்மில் எத்தனை பேருக்கு என்னம் உள்ளது ,  ஒரு காலத்தில் விவசாயத்திற்கும் உணவு விலைவாசி ஏறாமல் இருந்த நிலை மாறி தமிழ் நாடே வறட்சி நிலை வர என்ன காரணம் அரசியல் வாதிகள் எந்த அளவிற்கு தங்கள் குடும்பம் பசுமையாக சந்தோசமாக இருக்க வேண்டும் வேண்டும் என்று நினைக்கின்றனரோ அந்த அளவிற்கு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்

 சவி ராஜாவாத் அவர்கள் சாதாரணமாக செய்த சாதனைகள் சில துளிகள் :
    கிராமத்தின் முக்கியப் பிரச்னையான தண்ணீருக்காக மழை நீரை சேமிக்க கிராமத்து பெரியவர்கள் மற்றும் ஜெய்ப்பூரின் மண் ஆய்வாளர்களின் கருத்துகளைக் கேட்டு, கிராமத்தின் நூறு ஏக்கர் அளவிலான ஏரியை ஆழப்படுத்தினார் ராஜாவத். இதற்கு உதவியாக  உடல் உழைப்பை கிராம மக்கள் சுமார் 3,000 பேர்  தர முன் வந்தோம். சிறுவர்கள், பெண்கள், ராஜாவத்தின் பெற்றோர் உட்பட அனைவருமாக ஏரியை வெட்டியதில் நல்ல பலன் கிடைத்துள்ளது'
           இவர் செய்த இந்த செயலால் விவசாயம் மற்றும் தண்ணிர் பஞ்சம் தீர்ந்துள்ளது  அதாவது அவர் மட்டும் நினைக்காமல் மக்களும் அவரின் ஒவ்வொரு செயலுக்கும் மக்கள் உதவி செய்ததால் இந்த சாதனை செய்ய முடிந்தது

    மக்களுக்குக் உண்மையில்   உதவி செய்ய நினைத்து இவர் ஒவ்வொரு செயலையும்  தமிழ் நாட்டில் இதுவரை ஆட்சி செய்த வேட்பாளர்கள் எத்தனை பேர் செய்து உள்ளனர் 
     மக்களுக்கு செய்யாமல் கவர்ச்சியாக அறிக்கைகள் மட்டும்
இவர்களுக்கு மத்தியில் இவர் செய்த  ஒரு செயல்
  "ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் மழை நீர் சேமிப்பு குறித்து ஒரு கருத்தரங்கு நடக்கவிருப்பதை கேள்விப்பட்ட ராஜாவத் அதில் கலந்து கொண்டு தனது கிராமத்தின் நிலை பற்றி பேசியுள்ளார். பிரச்னையை முறையாக எடுத்து வைத்ததைப் பாராட்டிய அமைச்சர், சோடா கிராமத்தின் மழைநீர் சேமிப்புக்காக 71 லட்சத்தை ஒதுக்கியிருக்கிறார்."

    நாம் எப்போது இது போன்ற உண்மையாக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் வேட்பாளருக்கு ஆதரவு  தர போகிறோம்

        சவி ராஜவாத் போன்ற உண்மையாக மக்களுக்கு உதவி செய்ய நினைக்கும் வேட்பாளர் வேண்டும் அதற்க்கு நம்மால் முடிந்த அளவிற்கு பதிவுகள் மூலம் கருத்துக்கள் பரப்பலாம்
  சிறு துரும்பும் பல்குத்த உதவும் 
  நிஜத்தில் இருக்கும் சவி ராஜாவைத் போன்ற வேட்பாளர்களும் கற்பனை திரைப்படங்களில் ஸ்வதேஷ்  போன்றவர்களும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்

''படித்துவிட்டு பெரிய, பெரிய நிறுவனங்களுக்காக நாம் செலவிடும் மூளையை, ஒரு கிராமத்துக்காகச் செலவிட்டால், வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து, வளர்ந்த நாடுகளின் பட்டியலுக்கு நம் நாடு மாறிவிடும்'' என்று கூறிய சவி ராஜாவத் வார்த்தைகள் நிச்சயம் உண்மையாக நாம் முயற்சி செய்வோம் 

   
நான் உங்களிடம் கேட்பது மறக்காமல் இந்த பதிவுக்கு   வாக்களிக்கவும்மறக்காமல் பேஸ்புக் மூலம் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்  


  
             டோன்ட் மிஸ் VOTE
 

Saturday, January 8

ஹாரிஸ் பிறந்த நாளுக்கு ரசிகனின் பாடல் அன்பளிப்பு



          ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு  கலைஞனின் திறமைகள் பிடித்து இருக்கும்  எனக்கு ரஹ்மான் எப்படியோ அதே போல சாய் அவர்களுக்கு ஹாரிஸ்
    சாய் தன்னுடைய மானசிக குரு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பிறந் நாளுக்கு ஒரு இசையின் பிறந்த நாளுக்கு இசையால் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் 

(இந்த பாடலை இவர் 2009 ஏப்ரல் மாதத்தில் இசை வேலைகள் முடித்து விட்டார் தன்னுடைய மானசிக இசை கலைஞனுக்கு இந்த ஆண்டு அவர் பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார் சாய் )

 ஒரு இசை கலைஞனுக்கு அவர் விரும்பும் இசையாலே வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் சாய் தனியாக ஒரு சி டி தயார் செய்து தானே சென்று ஹாரிஸ் இடம் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் சாய்
 வாழ்த்துக்கள் சாய்
 
       சாய் அவர்கள் கணிப்பொறி துறையில் மிகபெரும் நிறுவனத்தில்  சிறந்த வேலையில் இருந்த போதும் தன்னுடைய இசை தாகத்திற்கு அவ்வப்போது பாடல்கள் அமைக்கிறார்
     கணிப்பொறி துறையில் அயாராத வேலைகளுக்கும் மத்தியில் சிறப்பாக தன்னுடைய இசை வாழ்க்கைக்கு ஒரு அமைதியான அடித்தளம் அமைத்து வருகிறார்  

 
 

 
இறைவன் நாடினால் தமிழ் திரை உலகிற்கு ஒரு சிறந்த இசை அமைப்பாளர் தயார்

  இப்போது இந்த் பாடல் பற்றி
பாடல் வரிகள் கீழே 


 மின்னலே நீ ஒளிர்வாய் என்றும்.. உலக திரை எங்கிலும்….
தலைவா உனக்கு வாழ்த்துக்கள்…
இது Orkut Fans நண்பர்கள்!!
(இசைமின்னல்…)
மெட்டுகள் இங்கு ஆயிரம் உண்டு..
இசையை அமைக்க கோடி பேர் உண்டு…
உந்தன் இசையை கேட்க கோடி பேர் உண்டு
யாரும் இவர்க்கு ஈடு இல்லையடா !
மின்னலை வைத்து இசைப்பதும் உண்டு..
தென்றலாக வந்து வருடுவதும் உண்டு..
மேகங்கள் இவர் இசை கண்டு பொழியுமடா..
புயலும் இவர் முன் வந்து பணியுமடா !
Harris போட்ட tune க்கு..
பாடல் ஒன்று எழுத…
கண்ணதாசன் கொடுத்து வெக்கலடா…
இங்க கவிஞர்கள் பலர்க்கு வேலையடா!

இசை தாயின் புதல்வரடா…
என்றும் இசையோடு வாழ்பவரடா..
அவர் இசை கேட்டால் என்றும் இன்பமடா ..
பல்லாயிரம் Orkut ரசிகரடா!
டென்ஷனாக நாம் இருக்கும்போது கூட..
காற்றின் வழியே Harris பாடல் வந்தால்..
எந்தன் ஜீவன் அப்பொழுதே உருகுமடா..
கால்கள் தானே தாளம் போடுமடா !
Oscar பற்றி கவலை இல்லை..
தேசிய விருதும் தேவை இல்லை!
மக்கள் மனம் வென்ற கலைஞனடா…
விருதுகள் உனை கண்டு வணங்குமடா!
(இசைமின்னல்…


    ஹாரிஸ் மீது உள்ள அபிமானத்தில் இந்த் பாடலை சாய் மற்றும் மாரீஸ் நீரோ  இயற்றி உள்ளனர் பாடல் இசை சாய் அவர்கள்

    பாடலையும் அவரே பாடி உள்ளார்  இது அவரின் ஆரம்ப கட்ட இசை என்பதால் எளிமையாக இந்த பாடலை படைத்துள்ளார்
வரும் காலங்களில் அவரின் பாடல் சிறப்பாக இருக்கும்

       
பாடலை கீபோர்ட் மற்றும் தன்னுடைய இசை கோர்வைகள் மூலம் சிறப்பாக அமைத்துள்ளார்  அதற்கே அவரை பாராட்ட வேண்டும் இசை அமைப்பதுடன் பாடலையும் அவர் பாடி இருக்கும் பாணி சிறப்பானது

  கீபோர்டின் துணையுடன் அவர் அமைத்து  இருக்கும் பாடலை ஒரு முறை கேட்டு பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்




பாடலை கேட்க்க 


 உங்களுக்கும் பாடல் எப்படி இருக்கு சாய் அவர்களின் இசை முயற்சிக்கு பாராட்டு தெரிவிப்போம்  




இதற்க்கு முன்பு சாய் அவர்களின் காதல் பவர் பாடல் பற்றிய பதிவு பார்க்க இதை அழுத்தவும்





         இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் கேட்க்கும் ஒரு விஷயம் இந்த் பதிவை படித்து மறக்காமல் சாய் அவர்களின் இசைக்கு ஒரு வாழ்த்து தெரிக்கவும்

  மறக்காமல் இந்த பதிவிற்கு வாக்களித்து பெரும் அளவில் சென்றடைய  செய்யவும்

Friday, January 7

காவலன் சிறுத்தை சிறந்த காட்சிகள் (ஒரிஜினல் படத்தில்)



          காவலன் மலையாள புட்டு  மற்றும் சிறுத்தை ஆந்திரா காரசார  ஊறுகாய்  இரண்டில் எதில் சூடு  அதிகம்  பார்க்க வேணுமா
கீழே இருக்கும் ஒரிஜினல் படத்தில் இருந்து ஐந்து காட்சிகள்

அப்படியே கண்ணை மூடி தமிழ் ஹீரோவை நினைத்து பாருங்கள் அவ்வளவுதான்

முதலில் மலையாளிகள் விஜயை காப்பற்ற போகிறார்களா   பாருங்கள்

பாடிகார்ட் (காவலன் )











இப்போ ஆந்திரா ஊறுகாய் சிறுத்தை





Thursday, January 6

ரஹ்மான் சார் உங்கள் இசைக்காகவே .....



              ஒரு படத்திற்கு உண்மையான பலம்  அந்த படத்தின்  இசை கூட ,அந்த இசை மொழி தெரியாதவன்  ஒருவனை  கவந்தால் அது அந்த இசை அமைத்த  கலைஞனுக்கு கிடைக்கும் மிக பெரும் அங்கிகாரம்
       அந்த வகையில் சொன்னால் ரஹ்மான் ஆங்கில படங்களுக்கு இசை அமைத்து உலக அங்கிகாரம் பெற்ற இந்த் நேரத்தில்
       இப்போது ரஹ்மான் இசை அமைத்து உலக அளவில் இசை ரசிகர்களால் / இசை விமர்சகர்களால் அதிக அளவில் பாராட்டப்படும் 127 ஹவர்ஸ்  படத்தின் இசை 


   அந்த படத்தின் உண்மையான  கதை நாயகனால் பாராட்டப்பட்டது ரஹ்மான் இசைக்கு கிடைத்த பெரும் அங்கிகாரம்

       மலையுச்சி ஏறும் போது ஒரு விபத்தில் கை இழந்து 127  மணிநேரங்கள் வெறும் கொஞ்சம் தண்ணிர் மற்றும் சிறுநீர் இரண்டை மட்டும் வைத்து ஒரு பெரும் வாழ்க்கை போராட்டம் நடத்தி உயிர் தப்பிய ஆரன் அவர்களின் உண்மை கதை இந்த் 127 படம்   


     

 ஆரன் சொன்ன வரிகள்  (நன்றி :விகடன் )

                ஏ.ஆர்... நம்ப முடியாத ஆச்சர்யமூட்டும் இசை அனுபவத்தை எனது வாழ்க்கைக் கதையில் சேர்த்ததற்கு நன்றி. உங்களுடைய சவுண்ட் ட்ராக் பின்னணியில் ஒலித்துக்கொண்டு இருந்தால், இன்னொரு 127 மணி நேரங்கள் நான் அந்த மலை இடுக்கில் கழிக்கும் தைரியம் வரப்பெற்றிருப்பேன் - ஆரன் ரால்ஸ்டன்’ - இது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆரன் எழுதி அனுப்பியிருந்த பாராட்டு வரி!

ஆரன் ரால்ஸ்டன் எழுதிய கடிதம் 
 
           இன்னும் ரஹ்மானின் பின்னணி இசை பற்றி மோசமாக கருது கூறுபவர்களுக்கும் சரி
அவர் வெளிநாட்டு இசை காப்பி அடித்து பெரிய ஆள் ஆனார் என்று  சில்லி தனமாக சொல்பவர்களும் சரி ரஹ்மான் இசை முடிந்தால் பாராட்டுங்கள்  முடியவில்லை என்றால் பொறாமைப்பட்டு  கேவலமாக பேச வேண்டாம்

       "இந்த வாரம் முழுவதும் ரஹ்மான் பற்றிய பதிவுகள் அதிகம் போட்டுள்ளேன் ரஹ்மான் பிறந்த நாளுக்காக  "



இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் 

பேஸ்புக் மூலம் பகிரவும்

Wednesday, January 5

இசை புயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



                 

              
06.01.2011 இன்று பிறந்த நாள் காணும் உலக நாயகன் இசைப்புயல் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்

அவரின் பிறந்த நாளான இன்று சில  இசை புயல் துளிகள்

  * இந்தியாவில் அதிக அளவில் வழங்கப்படும்  பிலிம் பேர்  விருதுகள் அதிகம் வாங்கியவர் ரஹ்மான் மட்டுமே
 * இந்தியாவில் இருந்து உலக அளவில் மிகபெரும்  விருதுகள் பாப்டா ,கோல்டன் க்ளோப்  ஆஸ்கர் விருதுகள் வாங்கியவர் ரஹ்மான் மட்டுமே
 * ஆசியாவில் சிறந்த இசை பதிவகம் வைத்து இருப்பவர் ரஹ்மான் மட்டுமே
*
உலக அளவில் 200   மில்லியன்  கேசட் விற்ற கலைஞர் ரஹ்மான்
* உலக அளவிலாலான டைம் பத்திரிக்கையால் மெட்ராஸ் மொசார்ட் என அழைக்கப்பட்டார்
* அதே டைம் பத்திரிக்கையால்  2009 ஆண்டில் சிறந்தர்களில் ஒருவராக   தேர்ந்தெடுக்கப்பட்டார்
 * ரஹ்மானின் பல பாடல்கள் ஹாலிவூட் படங்களில் பயன்படுத்தப்பட்டது (inside man , lord of war ,divine intevention ,தி accidental husbant ) போன்ற படங்கள்
* இந்திய அளவில் மதிப்பு மிக்க வந்தே மாதரம் ஜ ன க ன மன  ஆல்பங்கள்
*  உலக அளவில் பாம்பே ட்ரீம்ஸ் ,வாரியார் ஆப் ஹெவன் அண்ட் எர்த் , லார்ட் ஆப் தி ரிங் மேடை நாடகம்
* உலக அளவில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்திய கலைஞர்
* டைம் பத்திரிக்கையில் உலக அளவில் டாப் 10  ரஹ்மானின் ரோஜா பட இசை இடம் பெற்றது பெரிய சாதனை
* உலக மேடையில் தமிழ் பேசிய சாதனை தமிழன் 
* 20 / 20 கிரிக்கெட் தீம் இசை ,தமிழ் செம்மொழி பாடல்
* இத்தனை புகழுக்கும் மேலும் இன்னும் அதே அமைதியுடன்  இருப்பது அடுத்தவரை பார்த்து பொறமை பாடாத அந்த குணமே அவரை  முதல் இடத்தில வைத்துள்ளது 

 

                     ரஹ்மான் உங்கள் சாதனைகள் இன்னும் மேலும் தொடர வாழ்த்தும்  
                                        ஹாய் அரும்பாவூர்