Monday, September 13

என்னோட பதிவு வேறு இணையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (விஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள் )

அதாவது இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போய் இருக்கும் நண்பர்  சுதர் சொல்லாமல் போய் இருந்தால்  













ஆனால் சுதர் நான் அதை காப்பி அடித்தது போல பின்னுட்டம் போட்டு இருந்தார் எங்கே காப்பி அடித்திர்கள்    என்று போடவும் என்று அதனால் தான் இந்த பதிவு



நான் இதுவரை உருப்படியான பதிவு போட்டதில்லை இருந்தாலும் மோசமான பதிவுகள் எதுவம் இல்லை
அதிலும் அடுத்தவரின் உழைப்பை திருடும் அந்த மோசமான புத்தி எனக்கு இல்லை
என் பதிவுகள் அப்படி ஒன்றும் பெரிய இலக்கிய நடையும்  இல்லை
விஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள் என்று பதிவை நான் போடலாம் என்று அன்று 11.9.2010 அன்றே மதியமே முடிவு செய்து (நாட்டுக்க் ரொம்ப முக்கியம் என நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது 
இரவு பத்து மணிக்குள் நான் இதை ப்ளாக்கரில் ஏற்றி விட்டேன் நான் இப்போ இருப்பது துபாயில் ஆனாலும் சில நேரங்களில் என் ப்ளாக்கில் நான் என் பதிவை ஏற்றிய நேரம் துபாய் நேரம் என்றாலும் பதிவில் இந்திய நேரத்தை அதாவது சரியாக ஒன்னரை மணி நேரம் அதிகம் காட்டும் 
அது மட்டும் இல்லாமல் என் பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் நான் எழுதும் சில வார்த்தைகள் 
எடுத்து காட்டு :
 சிரிக்க மறந்த திரை உலகம்,சிரிக்க தொடங்குமா (ரீமேக் ) திரை உலகம் ? போன்றவைகள் படித்தவர்களுக்கு தெரியும் சிரிப்பு என்னும் வெற்றி மந்திரம்   ,வெற்றி மந்திரம் என்பதை நான் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் ஒரு சில மணிநேரங்களில் அப்படியே காப்பி செய்து போட்ட விடுப்பு இணையம் என் பெயரை போட்டு இருந்தால் சந்தோஷம்
இந்த பதிவு எழுதி எனக்கு ஒரு லாபமும் இல்லை முன்னே எல்லாம் பொழுது போக படம் பார்ப்பேன் இப்போ அதே நேரத்தில் பதிவை போடுகிறேன்
இதை பற்றி விடுப்பு இணையத்திற்கு மெயில் செய்து உள்ளேன் பாப்போம்
மீண்டும் சொல்கிறேன் நான் நான் அடுத்தவரின் உழைப்பை ஏமாற்றும் அளவிற்கு மோசமானவன் இல்லை
ஒரு பதிவு போட எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்
பதிவு உலகத்திற்கு வந்து ஒரு வருடம் ஆகா போகிறது
இதுவரை அடுத்தவரின் பதிவை எழுத்தை ஏமாற்றும் புத்தி வர வில்லை இன்மேலும் வர போவதில்லை என்று மட்டு சொல்ல விரும்புகிறேன் 
என் பதிவு வந்த விடுப்பு இணையம் படிக்க

      உங்கள் வாக்கு மிக முக்கியம்

             " DONT MISS MY VOTE "

             "THANK YOU FOR READING "

4 comments:

  1. நானும் இதுவரை உருப்படியான சொந்தமாக எழுதி பதிவு போட்டதில்லை இருந்தாலும் மோசமான பதிவுகள் எதுவம் இல்லை.
    ஏனெனில் எழுதும் உங்களை போன்றவர்கள் நன்றாக எலுதுகிறிர்கள்.கெடுக்க கூடாது என்ற நல்நோக்கமே....நான் சொந்தமாக
    எழுதுவது இல்லை.எழுத்து பிழை வேறு கஷ்டமும் கூட.நான் செய்வது சரியும் இல்லை.நான் கொப்பி எடுத்து போட்டால்
    அதை கொப்பி அடிச்சு போடினம் ஆத்திரம் ஆத்திரமாக வரும் சரி..சரி...சதி நடக்கட்டும்...எடுத்த விலைக்கே குடுத்துட்டன்
    என்று அமைதி ஆகி விடுவேன். ஒரு ஆக்கத்துக்கு சொந்தம் கொண்ட்டடுபவர்கள் இணைக்கும் புகைப்படமும் சொந்தமாக எடுத்ததா?
    என்று நினைக்க வேணும்.அத்துடன் கொப்பி எடுப்பின் எமது இணையம் சேர்க்கப்பட வேண்டும் என்று எமது ஆக்கத்துக்கு கீளே சேர்க்க வேண்டும்
    (எனக்கு இது பொருந்தாது )மன்னித்துக்கொள்ளுங்கள். உண்மை சொல்லி உள்ளேன் நானும் உங்களிடம் கொப்பி எடுத்து உள்ளேன்.(www .ulavan .net )
    உங்கள் நல்ல பதிவுகளை கொப்பி எடுக்க காத்திருக்கும்- உழவன்.

    ReplyDelete
  2. Copyright 2007(c) Viduppu.com //

    அந்த கட்டுரைக்கு கீழே இத வேற போட்டு இருக்காங்க சகா.

    ReplyDelete
  3. இப்போதெல்லாம் இப்படி பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்து போடுவது அதிகமாகி வருகிறது. என் பிளாஷ் பதிவுகள் கூட ஒரு இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

    இப்படி காப்பியடிப்பவர்கள் முன்கூட்டியே சம்பந்தபட்டவருக்கு தகவல் சொல்ல வேண்டும். அட்லீஸ்ட் கிரெடிட் கொடுக்கலாம்.

    தாங்கள் குறிப்பிட்ட நண்பர் உண்மை அறியாமல் எழுதிவிட்டார். இப்போது உண்மை அறிந்திருப்பர் என நினைப்போம்.

    ReplyDelete
  4. இதெல்லாம் சகஜமப்பா. don't feel.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை