Wednesday, June 23

விமர்சனம் செய்யும் முன்



          ஒரு படம் வந்து முழு வெற்றி அடைவது என்பது குதிரை கொம்பாக மாறி விட்ட இந்த காலத்தில் .எங்கேயோ ஒரு ஓரமா உட்கார்ந்து நூறு இருநூறு ருபாய் செலவு செய்து நோகாம வீட்டிற்கு வந்தோமா படத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும் ஓரமா இருக்கும் ஒரு இருக்கும் ஒரு அழுக்கை மட்டும் பார்த்து நல்ல படங்களை நோகாம அது நொள்ளை இதுல நொள்ளை என்று பதிவை போட்டு ஹிட் ஆகா மட்டும் பார்க்க துடிக்கிறோம்

  இப்படி நாம் செய்யும் சில அரை குறை விமர்சனத்தால் புதுமை கொண்டு வர துடிக்கும் நல்ல படத்தை நல்ல திறமை சாலிகளின்  உழைப்பை ஓர் நொடியில் கேவலப்படுத்தி நல்ல பெயர் வாங்க பார்க்கிறோம்

   நாம் செய்யும் பதிவு பணியால் சில அரை குறை பந்தாவை குறைத்தோம் அதை ஒப்பு கொள்கிறோம்

ஆனால் சிலரோ எப்படி பட்ட படமாக இருந்தாலும் குறை சொல்வதை மட்டுமே குறிகோளாக இருப்பதை என்னவென்று சொல்வது

   குறை சொல்வதை மட்டுமே குறிகோளாக இருப்பவர் அந்த விசயத்தில் உண்மையாக இருந்தால் தான் குறை சொல்லும் படத்தை திருட்டு தனமான டி வி டியில் கூட பார்க்க கூடாது .இணையத்தில் கூட பார்க்க கூடாது அப்படி இருந்தால் நீங்கள் சொல்லும் கருத்துக்கு ஒரு மரியாதை உள்ளது



     தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாத தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான அரைத்த மாவை அரைக்கும் சில இயக்குனர்களை குறை சொல்லுங்கள்
தன்னால் நடிக்க முடியாமல் ஒரே கதையை மட்டும் நடித்து தனக்கேனே ஒரு அரை குறை ரசிகர் வட்டத்தை வைத்து கொண்டு தமிழ் சினிமாவி கேவலப்படுத்தும் சில நடிகரை குறை சொல்லுங்கள் அதை விட்டு விட்டு
  இப்போது இருக்கும் காலகட்டத்தில் நூறு சதம் அனைவரும் விரும்பும் படத்தை எப்படி பட்ட கொம்பனாலும் தர முடியாது .இப்போது இருக்கும் தொழினுட்ப முன்னேற்றம் காரணாமாக அயர்லாந்து படத்தை பற்றி ஆயக்குடி காரன் கூட தெரிந்து வைத்து இருக்கும் இந்த காலத்தில் 



   " விமர்சனாம் எழுதுகிறேன் பேர்வழி  என்று நல்ல உழைப்பு உள்ள படங்கல்லை ஒரு நொடியில் கேவலப்படுத்த வேண்டாம் "

அப்படி இல்லை என்றால் உங்களிடம் இருக்கும் நல்லள சிந்தனைகளை நல்ல கதையை பதிவாக போடவும்

   நீங்கள் பதிவை போட்டு கேவலப்படுத்த என்று தனி தகுதி   உள்ள ஆட்கள் உள்ளார்கள் அவர்களை உங்கள் பதிவு மூலம் சொல்லவும்

ஒரே மாதிரி நடிக்கும் நடிகர் அதையும் பெருமையாக பேசும் நடிகர் வித்தியாசமாக நடிக்க தெரியாத நடிகர் என்று பல பேர் உள்ளார்கள் அவர்களை மட்டும் குறை சொல்லவும்

"  ஒரு பொருளால் கிடைக்கும் லாபமும் நஷ்டமும் அந்த பொருளை உரிமையாக கொண்டு இருக்கும் நபருக்கு தான் தெரியும் "
    யாருடைய படத்தையும் குறை சொல்லி அவரின் உழைப்பை நஷ்டப்பத்த  வேண்டாம்

அடுத்தவனின் பணம்  நஷ்டம் அடைந்தால் அது நமக்கு செய்தியாக தெரியும் "

அதே பணம் நம் பாக்கெட்டில் இருந்து காணாமல் போனால் அப்போது அது நமக்கு வலியாக  தெரியும்


வலியும் இன்பமும் அனுபவித்தால் தெரியும்

அன்புடன் ஹாய் அரும்பாவூர்

இப்போது இருக்கும் கால கட்டத்தில் நல்ல படமே ஓடாத போது ,நாம் ஏன் சார் இன்னும் ஓடாமல் செய்ய வேண்டும்

4 comments:

  1. நல்ல பதிவு தோழரே.............
    */ விமர்சனாம் எழுதுகிறேன் பேர்வழி என்று நல்ல உழைப்பு உள்ள படங்கல்லை ஒரு நொடியில் கேவலப்படுத்த வேண்டாம் "/*
    this line is awesome

    ReplyDelete
  2. அதெப்படி நல்ல இயக்குனர்களின் படங்களை மோசமாக விமர்சிக்காவிட்டால் நாங்கள் எப்படி பிரபல்யம் ஆவது? :-)

    ReplyDelete
  3. அதெப்படி நல்ல இயக்குனர்களின் படங்களை மோசமாக விமர்சிக்காவிட்டால் நாங்கள் எப்படி பிரபல்யம் ஆவது? :-)

    ReplyDelete
  4. Well said. All these bloggers thinks, they are like God and write as if they want about the movies. We should not hurt anyone or spoil others life by writing anything as we all the have the medium to write. Think bloggers before you write some stupid things...!

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை