Tuesday, February 15

அகரம் மற்றும் சூர்யா பற்றிய பொய் செய்திகள்



      அகரம் பற்றிய நான் எழுதிய பதிவுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி  


சிவகுமார் அவர்களும்  சரி சூர்யா அவர்களும் சரி கல்வி விசயத்தில் நற்பணி செய்யும் செய்யும் விசயத்தில் வியாபார நோக்கம் இல்லாமல் அரசியல் ஆசை இல்லாமல் மக்களுக்கு உண்மையில் உதவ வேண்டும் என்பதற்கு செய்கின்றனர் 



    நிச்சயம் சூர்யா நினைத்து இருந்தால் தான் செய்யும் விஷயம் ஒவ்வொன்றையும் விளம்பரம் செய்து அதன் மூலம் ரசிகர்களிடம்  தன் படம் ஓட வைக்க முயற்சி செய்ய முடியும் (  சூர்யா அவர்கள் தன் தந்தை செய்ய நினைத்த அதே செயலைத்தான் தன் தந்தை வழியில் செய்கிறார் )


         ஏதோ சூர்யா குடும்பம் இப்போதுதான் இது போன்ற செயலை செய்வதை போல சிலர் சொல்லும் நண்பர்களுக்கு  சூர்யா குடும்பம் 30 ஆண்டுகளுக்கு  மேலாக பொது சேவை செய்து வருகிறது அப்போது முதல் இப்போது வரை சிவகுமார் அவர்களும் சரி சூர்யா அவர்களும் சரி உண்மையில் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நினைப்பில் செய்யும் இவர்களை ஏதோ திரை உலகில் சூர்யா அவர்கள் அதிக அளவில் பணம் கேட்பதாகவும் தான் நடிக்கும் படத்திற்கு தெலுங்கு மொழியில் பங்கு கேட்பதாவும் பொய்யான
அவதூறு சொல்லி தான் விரும்பும் நடிகனை உத்தமர் போல காட்ட சூர்யா அவர்களை பற்றி தவறான தவல்கள் கூற வேண்டாம் 


         திரைப்படத்தில் அனைவரும் நடிப்பதே அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் அதன் மூலம் கிடைக்கும் புகழ் செல்வாக்கு போன்றவைக்கும்தான்
அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஒரு சிலரே உண்மையில் மக்களுக்கு உதவ நினைக்கின்றனர்  அந்த வகையில் தமிழ் திரை உலகில் சிவகுமார் தன் மகனை அதே வழியில் செலுத்தும் நேரத்தில் உங்களுக்கு சூர்யா அவர்களை பிடிக்கவில்லை என்றால் கூட பரவாய்ல்லை இது போன்ற தவறாக சொல்ல வேணாம்

     தமிழ் நாட்டில் உண்மையில் மக்களுக்கு உதவ நினைக்கும் மனிதர்களில் சிலர் இருக்கும் இந்த நேரத்தில் சூர்யா போன்றவர்கள் செய்யும் நல்ல விசயங்களை குறை காண வேணாம்

     சூர்யா பற்றி தவறாக சொல்லும் வதந்திகளும் உண்மைகளும் :
   அகரம் பற்றி அவர் விஜய் டிவியில் அடிக்கடி பேட்டி கொடுத்து மற்ற நடிகர்களை நடிக்க வைத்து விளம்பரம் செய்கிறார்
 விளக்கம் : 

அவர் அப்படி ஒன்றும் தன்னுடைய சொந்த விசயத்திற்கு விளம்பரம் செய்ய வில்லை அகரம் பவுண்டேசன்  மூலம்   கல்வி என்ற விஷயம் அனைவருக்கும் கிடைக்க செய்வதில் என்ன தவறு உள்ளது அவர் ஏதோ சினிமா உலகம் வந்த பின்புதான் இது போன்ற விசயங்களுக்கு உதவி செய்து இருந்தால் சரி நீங்கள்  சொல்வது  அவர் தந்தை இன்றல்ல நேற்றல்ல 30  ஆண்டுகளுக்கு மேல் கல்வி படிப்பு விசயத்திற்கு உதவுவது போல தந்தை வழியில் இவரும் உதவி செய்கிறார்
   பிரபல நடிகர்களை இந்த விசயத்திற்கு விளம்பரத்திற்கு பயன்படுத்துவது இந்த நல்ல செயல்  இன்னும் பல பேருக்கு உதவியாக இருக்கும் அல்லவா

இவர் குடும்ப நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் :
       இதில் என்ன தவறு இருக்கிறது இவர் ஒன்றும் பொது சேவை மட்டும் செய்ய வந்தேன் என்று சொல்ல வில்லையே நடிக்கும் வேலை பார்க்கும் போதே பொது சேவை போன்ற விசயங்களை உண்மையான மனதுடன் தன் தந்தை  காட்டிய அதே வழியில் செய்கிறார்
      குடும்ப படம் எடுக்கலாம் குடும்பமாக சேர்ந்து ரசிகர்களை ஏமாற்றுவதுதான் தவறு

 நான் உடனே சூர்யா அவர்கள் நடித்த  படம் எல்லாம் பார்ப்பேன் என்பது  தவறு  நீங்களும் சூர்யா நடித்த படங்கள் எல்லாம் பார்க்க வேண்டும் என்பதும் இல்லை
தமிழ் திரை உலகில் சூர்யா போன்ற சில நடிகர்கள் செய்யும் செயலை பாராட்டவிட்டலும் குறை சொல்ல வேண்டாம் நீங்கள் குறை சொல்வது என்றால் அவர் திரைப்படங்களை குறை சொல்லுங்கள்


    " சூர்யா அவர்களின் குடும்பம் ஆரம்பம் முதலே நல்ல விஷயங்கள் செய்வது அவர்களின் ஆத்ம திருப்திக்காக அரசியலில் இறங்கி அதன் மூலம் லாபம் பார்க்க இல்லை "

 

வாக்குரிமை   என்பது நம் உயிர் போன்றது அதை ஏன் மற்றவர்கள் சொல்லி நாம் வோட்டு போட வேணும் நாம் ஒன்றும் ஐந்தறிவு ஆட்டுகூட்டம் இல்லை
         "சிந்தித்து நாளைய தமிழகம் நன்றாக இருக்க சுயபுத்தியில் நாம் வாக்கை அளிப்போம்" 



7 comments:

  1. Anonymous15.2.11

    சூர்யா மேல் விஜய் ரசிகர்கள் பொறாமையில் பொங்கி வழிகிறார்கள் என்பதால் தான் இவ்வாறன அவதூறான செய்திகளை பரப்புகிறர்கள்...

    ReplyDelete
  2. நல்ல மனம் வாழ்க!

    ReplyDelete
  3. Anonymous16.2.11

    நல்ல நேர்த்தியான பார்வை நண்பரே...

    ரெண்டாவது படத்தில் இருக்கும் அருண், எங்கள் பள்ளியில் படித்தவர்... எனக்கு நண்பரும் கூட...

    புளி மூட்டை, புண்ணாக்கு கொடுக்கிறவன் எல்லாம் ஆதாயம் தேடி தான் விளம்பரம் பண்றாங்க...

    ஆனால் சிவகுமாரும் சரி அவருடைய வாரிசும் சரி மேற்சொன்னவர்கள் போல் அல்ல...

    மக்களுக்கு தெரியும் நண்பரே... குறை சொல்லும் அல்லக்கைகளை கண்டு கொள்ள வேண்டாம்...

    என்றும் உங்கள் அருண் பிரசங்கி

    ReplyDelete
  4. நண்பரே... அகரம் மூலம் எனது அண்ணன் மகன் தற்போது கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க சூரியாவே கட்டணப் பொறுப்பேற்றிருக்கிறார்.

    உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவமும் கேலி வார்த்தைகளும் செய்பவர்கள்தான் நாட்டில் அதிகம் போலும்!!

    ReplyDelete
  5. always true hero sivakumar

    ReplyDelete
  6. shivakumar&surya is not only film hero is real hero this is true

    ReplyDelete
  7. யாருடைய பொறாமையும் சூர்யாவ ஒன்னும் பன்னிடப்போறதில்ல...யாருடைய ரசிகராக இருந்தாலும் பரவாயில்ல..சுயநலம் கருதாம உதவி செய்றவங்க யாரக இருந்தாலும் என்ரேஜ் பன்னுனுங்க...குறை சொல்லாதீங்க..

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை