Sunday, December 5

காவலன் கடந்து வந்த பாதை & விஜய் பற்றி சில எண்ணங்கள்

காவல்காரன் காவல்கீதம் காவலன்   
     
  " விஜய் படங்களில் இந்த அளவிற்கு சிக்கல் சந்தித்த படம் இது ஒன்று மட்டுமே

தன்னுடைய தொடர் தோல்வியை போக்க தனக்கு உடனடி வெற்றி தேவை என்ற காரணத்தால் விஜய் தேர்ந்தெடுத்த பாதை எப்போதும் போல ஈசியான மற்றும் வெற்றி வாய்ப்பு நூறு சதம் உள்ளா ரீமேக்  படங்களை தான் குருவி அழகிய தமிழ் மகன் தொடங்கி வேட்டைக்காரன் சுறா வரை சொல்லும்படி விஜய் மாஸ் உள்ள உண்மையான வெற்றி இல்லாத காரணத்தால் அவர் நம்பியது மீண்டும் ரீமகே படங்களை தான்
   முதலில் அவர் தேர்ந்தெடுத்த சாய்ஸ் காமடி கலந்த பாடிகார்ட் ,அதற்க்கு முற்றிலும் மாறுபட்ட ஆசாத் இரண்டுமே பெரிய வெற்றி பெற்ற படங்கள்

அதே வெற்றி தமிழில் கூட அடையும் அதே கதை களத்துடன்  அந்த படங்களில் இருந்த கதை கருவுடன் இருந்தால்

காவலன் பிரச்சினை துளிகள்

 இந்த காவலன் படத்திற்குதான் எத்தனை பிரச்சிணைகள் காவல்காரன் என தொடங்கி காவல்கீதம் என்று நின்று இறுதியில் காவலனாக வருகிறது

   அசின் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பை மீறி இலங்கை சென்று அதில் ஒரு பிரச்சினை ஒன்று உருவாகி இப்போது பிரச்சினை சற்று அமுங்கி உள்ளது

  கடைசியாக வந்த படங்கள் மூலம் நஷ்டம் அடைந்த திரை அரங்க உரிமையாளர்கள் காவலன் படம் தங்களுக்கு இதற்க்கு முன் வந்த விஜய் படம் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய விட்டால் காவலன் படத்தை வெளி இட மாட்டோம் என போர்க்கொடி ஒரு பக்கம்


சிங்கப்பூர் மலேசியா உரிமை வாங்கிய தந்திரா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆறு வார இடைக்கால தடை சில நாட்களில் அது விலக்கப்பட்டது

மொத்தத்தில் இந்த காவலன் படம் மற்றவர்களை காப்பறுவதை விட  காவலனை காப்பற்றி திரை அரங்கில் வெளி இடுவதே பெரும் பாடாக இருக்கும் போல உள்ளது


வெற்றியை காப்பதே பெரும் வெற்றி 

நிச்சயம் வெற்றி என்னும் உச்சியை அடைவதை விட அந்த கோட்டையில்  நிலைத்து இருப்பதே  உண்மையான  திறமை

    இந்த விசயத்தில் தமிழில் எந்த இளம் தலைமுறை நடிகனுக்கும் கிடைக்காத பெரும் வாய்ப்பு விஜய் ஒருவருக்க்தான் கிடைத்துள்ளது  அதிகமான ரசிகர் கூட்டம் எல்லோரயும் கவரும் அவரின் ஜனரஞ்சக நடிப்பு எவ்வளவுதான் அவரை பற்றி குறை சொன்னாலும் அவரின் இடைப்பட்ட காலங்களில் வந்த சிவகாசி கில்லி பிரியமானவளே காதலுக்கு மரியாதை பிரண்ட்ஸ் என பல படங்களில் அவரின் கதையுடன் கலந்த அவரின் நடிப்பையும் விஜய் என்ற நடிகனை  அனைவரயும் கவர்ந்த காரணத்தால் மட்டுமே இந்த அளவிற்கு அவரால் முன்னேற முடிந்ததது




யானை தன தலையில் மண் அள்ளி போட்ட கதை 

  ஆனால் கடைசியாக வந்த படங்கள் அவர் கஷ்டப்பட்டு வளர்த்த கோட்டையை அவரே உடைப்பது போல உள்ளது
அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று எந்த ரசிகனும் விரும்பவில்லை
          சும்மா நார்மலாகாவே அவர் நல்ல கதையில்  நடித்தாலே  படம் வெற்றி பெரும் என்ற நிலையில்  யார் பேச்சை கேட்டாரோ கடைசி படங்களில் அவர் காட்டிய ஓவர் ஹீரோயசம் அவருக்கு அவரே ஆப்பு வைத்து கொண்ட கதையாக போனது


கண்ணுக்கு தெரியாமல் செய்யும் உதவி கடவுள் செய்யும் உதவி போன்றது 

             இந்தியாவில் ஏழை மக்களுக்கு உதவி செய்ய அரசியல் மட்டும் வழி இல்லை  .இந்தியாவில் ஏழைகளுக்கு உதவ அரசியலில் நுழைந்து கோடிஸ்வரர்கள் ஆனவர்களின் எண்ணிக்கை போதும்

             எப்படியோ காவலன் படம் வெற்றி படமாக மாற வாழ்த்துக்கள்

இந்த மனிதர் அடைந்த வெற்றி உண்மையான உழைப்புக்கும் சுயநலம் இல்லாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி                                                MGR REAL HERO 



    
காவலன் பிரச்சினை துளிகள்  

Friday, December 3

AR ரஹ்மானின் TOYOTA & AIRTEL கலக்கல் வீடியோ படங்கள்



     ரஹ்மான் அவர்கள்  டொயோடா புது மாடல்  எடிஒஸ்  மாடலின் பிராண்ட் அம்பாசிடர் ஆகா  உள்ளார்
அதற்க்கான விளம்பர படங்களில் அவர் நடித்து உள்ளார் கலக்கலான அந்த விளம்பரம் கீழே


ஏர்டெல் 3 ஜி அலைவரிசையின் புது விளம்பர ட்யூன் அதற்கானா கலக்கல் விளம்பரம் கீழே



மற்றும் ஒரு பழைய விளம்பரம் வேர்ல்ட் ஸ்பேஸ் ரேடியோ விளம்பரம் இது  


Wednesday, December 1

நந்தலாலா பற்றி மிஸ்கின் சொன்னது ஆனந்த விகடன் இதழில்

''முதல் இரண்டு படங்களும் ஆக்ஷன். இப்போ சடார்னு வேறு இடத்துக்குப் போவது ரிஸ்க் இல்லையா?''

''இல்லைங்க! 'சித்திரம் பேசுதடி'க்குப் பிறகு படமே கிடைக்காமல் அநியாயத்துக்குக் காத்திருந்தேன். அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் 'அஞ்சாதே'. படம் முழுக்கவே எரிச்சலும், ரத்தமும், துப்பாக்கிச் சத்தமுமா இருக்கும். ஏன்னா, 'நந்தலாலா' ஸ்க்ரிப்ட்டுடன் நிறைய ஹீரோக்களிடம் போனேன். 'வருத்திக்கிற மாதிரி இருக்கே'ன்னு வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதான் நானே நடிச்சுட்டேன். ஆனா, படம் பார்த்துட்டு அவங்க வருத்தப்படலாம்!''

 
(நிச்சயம் வருத்தப்படலாம் )




 


'இவ்வளவு கடினமான கதைத்தளத்தில் ரசிகர்கள் ஆழமாகப் போக முடியும்னு நம்புறீங்களா?''

'' 'நந்தலாலா' நிச்சயம் அறிவுரை சொல்ற படம் இல்லை. இதுவரை சரியான படத்தைப் பாராட்டுவதில் பார்வையாளர்கள் தப்பு செஞ்சதே இல்லை. தியேட்டரில் டிக்கெட் வாங்கும்போது, குத்துப் பாட்டு, அஞ்சு ஃபைட், ஹீரோயின் தொப்புள்னு நினைச்சு யாரும் வாங்கறது கிடையாது. புதுசா ஒரு உலகத்துக்குப் போக முடியுமான்னுதான் பார்க்கிறான். பிடிச்சா, தலை மேலே தூக்கிவெச்சுக் கொண்டாடுவாங்க. படங்கள் தப்பு செய்தால், அது நம்ம தப்பாகத்தான் இருக்கும்!''

 (நிச்சயம் உங்கள் கருத்தை காப்பற்றி விட்டார்கள் ரசிகர்கள் )

 நன்றி :

அனந்த விகடன் 31 .12 . 2008 

 


    நிச்சயம் மிஸ்கின் அவர்களின் இந்த நம்பிக்கையை எந்த ரசிகனும் பொய் ஆக்க வில்லை  அவர் அந்த கதை கரு மேல் வைத்த நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் 


அதே போல கிகுஜிரோ படத்தை பற்றி கொஞ்சம் சொன்னால் தேவலை


    ஒரு நல்ல படத்தை வெற்றி படம் ஆக்கிய ரசிகர்கள் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்கள்


நாங்கள் எந்திரன் படமும் சரி நந்தலாலா படமும் சரி எங்களுக்கு பிடித்து இருந்தால் வெற்றி பெற வைப்போம்
எங்களுக்கு தேவை திரையில் மட்டும் நடிக்க தெரிந்த நடிகர்களின் பொழுதுபோக்கு படம் மட்டுமே


நிஜத்தில் நடித்து ரசிகனை ஏமாற்றும்  நடிகர்களின் படம் இல்லை