Tuesday, March 9

தேர்வு காலம் தொடர் பதிவு



கதை ,விளையாட்டு என்று பலவற்றிக்கு தொடர் பதிவு எழுதிய வலைபதிவு நண்பர்களே நம் வருங்கால மாணவர்களுக்கு தேர்வு ,மேற்கொண்டு என்ன படிப்பது பற்றி தொடர் பதிவு எழுதலாம்

இது தேர்வு காலம் மற்றும் தேர்வு முடிவுகள் வரும் காலம் எனவே கல்வி பற்றிய அழகிய உங்கள் கருத்துக்கள் அடங்கிய தொடர் பதிவை தொடருங்கள்

இப்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு காலம்
இல்லை அவர்களின் வாழ்க்கை பாதையை மற்ற போகும் காலம் என கூட சொல்லலாம்

இனி மேல் படித்து தேர்வு எழுதி பாஸ் செய்வது கஷ்டம் அதை பற்றி பேச வேண்டாம்


எல்லா மாணவர்களுக்கும் இருக்கும் மிகபெரும் குழப்பம் ,மேற்கொண்டு  என்ன படிப்பது இனி வரும் காலங்களில் படிப்புக்கு என்ன செய்வது பற்றிய பெரும் சிந்தனை மட்டுமே

ஒரு மாணவனின் தலை எழுத்தை மற்றும் இந்த தேர்வு காலமும்  சரி அதை தொடார்ந்து வரும் முடிவுகளும் தான்

நகர் புற மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் நிலை பரவயில்லை என சொல்லலாம்


கிராமப்புற மாணவர்களுக்கு மேற்கொண்டு  என்ன படிப்பது  எந்த கல்லூரியில் சேர்வது கணினி படித்தால் வாழ்க்கையா ?
பொறியியல் படிப்பா? வணிகம் சார்ந்த படிப்பா ?ஆசிரியர் பயிற்சி படிப்பா என்று அவன் எண்ணம் பலவாறு இருக்கும்

ஏன் இதை சொல்கிறேன் என்றால் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெரும் மாணவன் மேற்கொண்டு சேரும் மேல் நிலை பள்ளி பிரிவுகள் தான் அவன் கல்லுரி படிப்பிற்கு அஸ்திவாரமாக  இருக்கும் 

 அப்படி இல்லாமல் ஏதோ பள்ளி படிப்பு படித்தோம் கல்லூரியில் பணம் கட்டினால் இடம் கிடைக்கும் என்ற எண்ணம்
பிற்கால அவன்  வாழ்க்கையில் வடிவேலு சொல்வது போல
 "பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் "
என்ற நிலை அடைய கூடாது

 நாம் இந்த நிலைமைக்கு வர என்ன காரணம் என்று சொல்லலாம்
நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகள் செய்யலாம் எப்படி என்றால்
 பள்ளிகளில் அறிஞர்களை வைத்து மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்ற நிகழ்ச்சிக்கு நாம் படித்த பள்ளிக்கு நம்மால் முடிந்த உதவி செய்யாலாம்

மேற்படிப்பு பற்றி பதிவுகள் போடலாம்

நமக்கு தெரிந்த அளவில் நான்கு மாணவர்களுக்கு நம்மால் முடிந்த அளவில் சிறு சிறு உதவி செய்யலாம்

 மீண்டும் சொல்கிறேன்  கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு இந்த தேர்வு காலத்திலும் சரி தேர்வு முடிவு நேரத்திலும் சரி நம்மால் முடிந்த உதவி செய்யல்லாம்

தேர்வு மற்றும் மேற்படிப்பு பற்றிய உங்களின் சிறப்பான பதிவு தேவை
எனக்கு அந்த அளவு அறிவு இல்லை அதனால் படிப்பு பற்றி சிறப்பான எண்ணம் உள்ளவர்கள் தொடர் பதிவு இடவும்



  '" ஒருவனுக்கு ஒரு மீனை கொடுப்பதை விட  அவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடுப்போமே "


 "ஒரு தீபம் இருளை விளக்குவது போல நல்ல கல்வி சமுதாய இருட்டை நீக்கும் "

"தன் மக்களுக்கு ஒரு வீட்டை கொடுப்பதை விட அவனுக்கு அழகிய கல்வி எனும் கோவிலை கொடுக்கலாம் "







தேர்வு காலம் பதிவை பிடித்து இருந்தால் உங்கள் கருத்துடன் உங்களால் முடிந்த அளவில் தொடரவும்
அன்புடன் ஹாய் அரும்பாவூர்

பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் வோட்டை மறக்காமல் போடவும்

Monday, March 8

நான் யாருக்கும் ரசிகன் இல்லைங்கோ

திறமை உள்ளவன் வெற்றியை  யாராலும் தடுக்க முடியாது
        அது அது அவனால் மட்டுமே முடியும்
                                                                          உண்மை மொழி

அப்புறம் போன பதிவில்
"நித்யானந்தா பற்றி எழுதலாம் என்று பார்த்தல்
அவர் பற்றி வேட்டைக்காரன் படத்திற்கு பிறகு ரொம்ப நாள் ஓடுற வலை தலைப்பு நித்தி மட்டுமே"

என்ற வரியை பார்த்த உடன் xxx என்பவர் ரொம்ப காரமா ஒரு மெயில் அனுப்பி உள்ளார் நீங்கள் எல்லாம் அஜித் ரசிகர் ஆதனால் தான் விஜய் பற்றி தப்பா எழுதுறது  உங்க வேலை என்று எழுதிய அன்பருக்கு ஒரு பணிவான வேண்டுகோள் யாரும் விஜய் பற்றி தப்பா எழுதினா ஏன் உடனே அஜீத் ரசிகர் சூர்யா ரசிகர் என்று நீங்களே முடிவு செய்து கொள்கிறிர்கள்

  நாங்கள் ஒன்றும் அவரை பற்றி தப்பா எழுதுறதால அவர் படம் ஓடாம போக வில்லை நல்ல கதை இதைதான் ரசிகன் எதிர்பார்க்கிறான்

  ஏதோ ரஜினி அண்ணாமலை பாட்சாபடையப்பா  படங்களில்  அவருக்கு ஏற்ற கதையில் நடித்தார் அதனால் அவர் படங்கள் ஓடியது

அவர் படம் ஓடியதே என்று அதே மாதிரி கதையில் எத்தனை  முறை நடிப்பிங்க


 அவரே தன் பாணி மாற்றி நடித்த சந்தரமுகி  பெரும் வெற்றி அடையவில்லையா ?






   அந்த மிக பெரும் கலைஞனே தன் நடிக்கும் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில்   நடிக்கும் போது (சிவாஜி மொட்டை )

  வில்லன் வருவாராம் அவர் இவர் இருக்கும் பகுதிக்கு தீங்கு செய்வாராம் இது இடைவேளைக்கு முன்

இடைவேளை நேரத்தில் இவர்  வீர வசனம் பேசி நாலு சண்டை போட்டு  பின் பகுதியில் ஆட்டம் போட்டு ஜெயிப்பார் என்ன கொடுமை சார் .என்ன சிறப்பான கதை சார் இவை எல்லாம்
இதை பற்றி பேசினா உடனே  அஜீத் ரசிகர் என்று பெயர்

 அது அஜீத் ஆகா இருந்தாலும் சரி விஜய் ஆகா இருந்தாலும் சரி எங்களுக்கு தேவை நாங்க தர்ற காசுக்கு நல்ல பொழுது போக்கு மட்டுமே உங்கள் வம்பு புடித்த  வசனம் இல்லை

   விஜய் நடித்த போக்கிரி ,கில்லி ,சிவகாசி படங்களை சலிக்க சலிக்க பார்த்த ரசிகன் நான் வில்லு குருவி வேட்டைக்காரன் படத்தை பாதி கூட பார்க்க புடிக்காமல் போனதிற்கு  காரணம் எல்லோருக்கும் தெரியும்



இதே மாதிரிசொன்ன நாங்க எல்லாம்
 வம்பு தளபதி வருங்கால விடியல் வெள்ளி நாளைய தமிழகம்  உலக சூப்பர் ஸ்டார் தமிழ் படம் சிவா 
சங்கம் சார்பாக கண்டனம் தெரிவிப்போம்




இது எப்படின்னா புலியை பார்த்து  CAT  சூடு போட்டு கொண்ட கதைதான்



மறக்காம உங்கள் கருத்தை பின்னுடம் இடவும்
தனியாக மெயில் பண்ண வேணாம் mr XXX


மறக்காம வோட்டை போடுங்க சாரே

Sunday, March 7

கடவுள் நம்பிக்கை வேண்டாம் என்று சொல்ல வில்லை?

எதை பற்றி பதிவு போடுறதுன்னு ஒரே குழப்பம்

நித்யானந்தா பற்றி எழுதலாம் என்று பார்த்தல்
அவர் பற்றி வேட்டைக்காரன் படத்திற்கு பிறகு ரொம்ப நாள் ஓடுற வலை தலைப்பு நித்தி மட்டுமே

சரி நாமும் நித்தி பற்றி ஒரு சின்ன பதிவு


அவரும் டோரா போற மலை வாழ் ஒசாமா மாதிரி வீடியோ ரிலிஸ் பண்றார்

நான் அவன் இல்லைங்கோ என்று அவர் கூவுற ஸ்டைல் பார்த்தா

மன்மதன் படத்தில் வர்ற சிம்பு மாதிரி அவன் எனக்கு ஒரு தம்பி இருக்கான் அவன்தான் ரஞ்சிதா உடன் இருந்தான் என்று சொன்னாலும் சொல்வார் போல

நல்ல வேலை இந்த வீடியோ சன் டிவில வந்தது இல்லை என்றல் அவரிடம் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தை கொண்டு தன்னை நல்லவர் என்று நிருபிதாலும் நிரூபிப்பார்


நித்தி தன் சார்ந்த மதத்தை ஏமாற்ற வில்லை அவரை இன்னும் நம்பும் அவரின் பக்தர்களை தான் ஏமாற்றி உள்ளார்

பணம் இல்லாத வாழ்க்கையில் ,தன்னம்பிகை இல்லாத மக்கள் தான் அடுத்தவரை நம்பி வாழ வேண்டும்

கடவுளை நம்புவது நம்பிக்கை அது உலகம் முழுவதும் உள்ளது
அது நாசாவில் பனி புரியும் விஞ்ஞானி ஆகா இருந்தாலும் சரி
கிராமத்து படிக்காத பாமாரனாக இருந்தாலும் சரி

ஆனால் தனி மனிதனை நம்பி அவன் உபதேசங்களை நம்பி அவனிடம் நாம் நேர்மையாக சம்பாதித்த பணத்தை அவன் குறுக்கு வழியில் சுகம் பார்க்க கொடுப்பது பெற்ற தாயை பட்டினி போட்டு பாவத்தை சம்பாதிப்பது போல்

கடவுள் நம்பிக்கை வேண்டாம் என்று சொல்ல வில்லை இது போன்ற புல்லுரிவிகளின் பேச்சை நம்பி நம்மை நாமே முட்டாள் ஆக்கி கொள்ள வேண்டாம் என்று சொல்கிறேன்


பராசக்தி படத்தில் வரும் வசனம் போல்
" கோவில் வேண்டாம் என்று சொல்ல வில்லை ஆனால் கோவில் புல்லுரிவிகளின் கூடாரம் ஆகா மாற வேண்டாம் என்று சொல்கிறேன் "


இது போன்று ஏமாற்றுபவர்களுக்கு நூறு ருபாய் தருவதை விட நம் கண்ணுக்கு முன் கஷ்ட படும் ஒரு நல்லவருக்கு ஒரு ருபாய் கொடுத்து பாருங்கள் அன்று நிம்மதியாக தூக்கம் வரும்


               பதிவு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை மறக்காமல் இடவும்
                    பதிவு நாலு பேரை சென்றடைய உதவியாக இருக்கும்