Friday, November 6

ஆங்கில கல்வியும் நம் மாணவர்களும்





இந்த இணைப்பு ஏற்கனேவே ஏற்றப்பட்டது
எனினும் இதன் கருத்து எல்லோர்ருக்கும் செல்ல வேண்டும் என்றுதான் மீண்டும் சில மாற்றங்கள் செய்து
இணையத்தில் ஏற்றப்படுகிறது தவறு என்றால் மீண்டும் இது போன்று தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன்

நம் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இல்லாமல் தனியார் பள்ளி மாணவர்கள் கூட கல்லுரி வாழ்க்கை செல்லும்போது சந்திக்கும் ஒரு மிக பெரிய பிரச்சினை ஆங்கிலம் என்றால் மிகை இல்லை

நான் சொல்லும் கருத்து நூறு சதம் எல்லோருக்கும் பொருந்தாது .ஆனால் தொண்ணுறு சதம் இது உண்மைதான்

நகர்புற மாணவர்கள் கூட பராவஇல்லை ஆனால் கிராமபுற மாணவர்கள் கல்லூரி வாழ்க்கை செல்லும் போது சந்திக்கும் மிக பெரும் பிரச்சினை


கல்லுரி செல்லும் மாணவன் முழு ஆங்கில வழி கல்வி என்னும்போது அவனால் உடனே புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்

ஆங்கில வழி கல்விக்கு அவனை அங்கு சென்று பிரத்யோகமாக தயார் செய்ய வேண்டி உள்ளது ,இதற்குள் ஆங்கில் வழி கற்ற மாணவன் அவனை விட சிறப்பாக கல்வி கற்று அவனை விட ஒரு படி முன்னே சென்று இருப்பன்

நம் அரசு பள்ளிகளிலும் சரி கிராமபுற பள்ளிகளிலும் சரி இதை பற்றி ஒரு புது பார்வை தேவை உள்ளது
நிச்சயமாக தமிழ் வழி கல்வி என்பது மிகவும் சிறப்பானது தான் ஆனால் அதே நேரம் கல்லுரி செல்லும் மாணவன்
ஆங்கில வழி கல்விக்கு அவனை தயார்படுத்த முடியாமல் அவன் படும் பாடு
மிகவும் திண்டாட்டம்தான்

எனக்கு தெரிந்த ஒரு நண்பரின் மகன் பள்ளி இறுதி ஆண்டில் மிகவும் நல்ல மதிப்பெண் பெற்று முதல் நிலை மாணவனாக வெளி வந்தான்
ஒரு நல்ல கல்லுரி ஒன்றில் கணினி துறை அவனுக்கு கிடைத்தது .மிகவும் மகிழ்ச்சியான அளவில் சென்ற அவன் வாழ்க்கை இறுதி தேர்வில் தமிழ் கணிதம் தவிர மீதி பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை
சில பாடங்களில் சொற்ப மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருத்தன்
இதற்க்கு என்ன காரணம் என்றால் அவனால் ஆங்கிலத்தில் உடனடியாக புரிந்து கொள்ள முடிய வில்லை அல்லது மனனம் செய்து அவன் எழுதிய தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளன்


இது ஒரு நிதர்சனமான உண்மை நான் பொதுவாக தமிழ் வழி கற்ற மாணவர்கள் எல்லாம் இப்படி என்று சொல்ல வில்லை தமிழ் வழி கற்ற எத்தனயோ மாணவர்கள் மிகவும் உயர்ந்த நிலை பெற்று உள்ளனர்

ஆனால் இப்போது உள்ள காலத்தில் நாம் காலத்திற்கு ஏற்ற வகையில் நம் மாணவர்கள் கல்வி திறன் மாற வேண்டும் என்றால்
ஆங்கில திறன் என்பது நம் மாணவர்களுக்கு இளைய வயதில் அவனுக்கு கிடைக்க வேண்டும்
மேல்நிலை கல்விக்கு சென்றும் எத்தனை மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் படிக்க தெரியும் என்று நீங்கள் சோதித்து பாருங்கள்
எதற்கோ எல்லாம் செலவு செய்யும் நம் அரசு ஏன் ஆங்கில வழி கல்வி தேவை இல்லை
ஆங்கிலம் என்பதை சரளம்க வேண்டம் குறைந்த அளவில் நம் மாணவர்கள் பேச
இள நிலை பள்ளி கற்கும் மாணவர்களுக்கு என்ன செய்தது
ஹிந்தி வேண்டாம் சரி ஒத்து கொள்கிறோம் .
முதல் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு எந்த அளவில் ஆங்கில அறிவு உள்ளது என்று பார்க்க வேண்டாமா ?
நம் பக்கத்துக்கு மாநில கேரளாவை பாருங்கள் என்று சொல்ல வில்லை அவர்களை விட நம் கல்வி தரம் உயர்வுதான்.
கேரளாவை சேர்ந்த ஒருவன் ஹிந்தி ஆங்கிலம் என்று சிறு வயதில் கல்வி கற்பதால் அவன் மாநிலம் தாண்டி கூட கல்வி கற்க வந்தால் அவனால் கல்லுரி கல்விஐ சிறப்பாக முடிக்க முடிகிறது
நம் மாணவர்களுக்கு ஹிந்தி படிப்பு வேண்டாம் ஆனால் ,ஆங்கில கல்விக்கு நம் அரசு என்ன செய்தது
தனியார் பள்ளி மாணவனை விட அரசு பள்ளி மாணவனுக்கு சிறப்பான ஆங்கில அறிவு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்

நம் எத்தனை பெற்றோர் குழந்தைகளின் ஆங்கில அடிப்படை கல்விக்கு சிறு வயதில் முயற்சி செய்கின்றனர்


1 ) மாணவர்களின் இளநிலை பள்ளி படிப்பிலே அவர்களுக்கு ஆங்கில அடிப்படை கல்வி உள்ளத என்று பார்க்க வேண்டும்


2)பள்ளிகளில் ஆங்கிலத்திற்கு என்று பி எ ஆங்கிலம் படித்த ஆசிரியர்களை நியமிக்கலாம்
3)அவர்களுக்கு சிறு சிறு ஆங்கில வார்த்தைகள் படிக்க எழுத சிறு வயதில் நல்ல அடிப்படை கல்வி கிடைக்க வழி வகைஇப்படி எல் செய்ய வேண்டும்


இப்படி சொல்வதால் நான் தமிழுக்கு எதிரானவன் என்று நினைக்க வேண்டாம்
ஆங்கிலத்தில் நம் மாணவர்கள் நல்ல முறை கல்வி கற்று அவர்கள் வாழ்க்கை நல்ல முறை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டுதான்


இதில் ஏதும் தவறு இருந்தால் மனதிற்குள் திட்டவும்

சரி என்றால் உங்கள் இங்கு கருத்து இடவும்

Thursday, November 5

புத்தக மதிப்புரை ""ஒரு கனவின் இசை " AR RAHMAN



ஏ ஆர் ரஹ்மான் பற்றி தமிழ் மொழியில்  மிக குறைவான அளவில் மட்டுமே புத்தகம் வந்திருக்கு

அந்த வகையில் சிறந்த புத்தகம்



ரஹ்மானின் ஆரம்ப காலம் முதல் அவர் தந்தை ஆர். கே. குலசேகர் பற்றி அதிகம் யாருக்கும் தெரியாத தகவல்கள் மற்றும் அவர் மலையாள திரை உலகில் சாதித்த சாதனைகள் மற்றும் சோதனைகளை ஆசிரியர் கிருஷ்ணா டாவின்சி மிக தெளிவாக விவரங்களை சேகரித்து இந்த புத்தகத்தில் எழுதி உள்ளார்
ரஹ்மான் பற்றி நமக்கு தெரியாத மிக தகவல்களை சேகரித்து இதில் எழுதி உள்ளார்
ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு பின் வந்த புத்தகம் என்பது இதன் சிறப்பு


ஆனந்த விகடன் இதழில் தொடராக வரும்போதே ஒவ்வொரு வாரமும் எதிர்பார்ப்பை துண்டிய இந்த தொடர் புத்தக வடிவில் ஒரு இசை  காவியாமாக உள்ளது என்றல் மிகை இல்லை







நல்ல தரமான காகிதம் சிறப்பான படம் ரஹ்மான் பற்றி ரஹ்மான் ரசிகர் மற்றும் இல்லாமல் திரை இசை ரசிகர் எல்லாம் படிக்க வேண்டிய புத்தகம்


எல்லா புத்தக கடைகளில் கிடைகும்
ரஹ்மான் ரசிகர்கள் அவர் பாடல் கேசட் உடன் மறக்காமல் வைக்க வேண்டிய புத்தகம்




நூலின் பெயர் : ஒரு கனவின் இசை 
ஆசிரியர் : கிருஷ்ணா டாவின்சி 
நூல் வெளியிடு :விகடன்

Wednesday, November 4

லீலை அமைதியான மாலை நேரம்



லீலை அமைதியான மாலை நேரம்


ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆதிகம் யாரும் பார்த்திராத ஆனால் .ஆனால் அதிகம் பேரால் அறியப்பட்ட நபர் அவர் பேசி யாரும் பார்த்து இல்லை ஆனால் அவர் படம் பேசி பலர் பார்த்து உண்டு

லீலை ஆஸ்கர் ரவிச்சந்திரன் வழங்கும் புது பட பாடல் பற்றி உங்களுடன்
ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் இப்போதே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ள படம் என்றால் மிகை இல்லை

இசையமைப்பாளருக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடிய வில்லை ஒரு நல்ல கலைஞனின் நேர்த்தி மற்றும் கலக்கலாக ஆனால் அமைதியான பாடல்கள்




ஜில்லென்று ஒரு கலவரம் // சதீஷ் சக்கரவர்த்தி

பப்ள் கம் //பென்னி தயாள் ,சுனிதா சாரதி ,சுவி

ஜில்லென்று ஒரு கலவரம் //சதீஷ் சகர்வர்த்தி

ஒரு கிளி ஒரு கிளி // சதீஷ் சக்கரவர்த்தி


உன்னை பார்த்த பின்பு //ஹரி சரண் மரியன்

பொன்மாலை பொழுது ///பென்னி தாயால்

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம் .
ஜில்லென்று ஒரு கலவரம் நிறைய பேர்களுடைய ரிங்க்டோன் ஆகா மாறும் பாடல் கேட்கும் பொது அமைதியான ஆனால் ஒரு சிறப்பான இசையுடன் ஒரு கார்பொரட் கம்பெனி போல் பாடல் நம்மை மெல்ல வசிகரிக்கும்
இரவு நேரத்தில் ஐ போட் இல் இதை கேட்க்கும் போது மனதை ஏதோ செய்வது உண்மை
பப்ள் கம் பாடல் மனதில் உடனே ஒட்ட மறுக்கிறது இருந்தாலும் குறை சொல்ல முடியாத பாடல்
ஒரு கிளி ஒரு கிளி மெலிதான மெல்லிசை மெலிதான தாள கட்டு பாடல் கேட்கும் போது நம்மை வசிகரிப்பது உண்மை ஸ்ரேயா கோஷல் குரல் சிறப்பாக உள்ளது வயலின் ஷெனாய் புல்லாங்குழல் கோஷலின் குரல் எல்லாம் ஒரு சிறந்த பாடலை கேட்ட உணர்வு தருவது உண்மை
பொன்மாலை பொழுது ஆரம்ப தாளாம் பென்னி தயாளின் குரல் சிறப்பாக உள்ளது
இளைஞர்களின் நாடி துடிப்பு பார்த்து அடிக்கப்பட்ட இசை என்றல் மிகை இல்லை
உன்னை பார்த் பின்பு ஹரி சரண் குரல் மயக்கும் குரலாக உள்ளது
மொத்தத்தில் லீலை உடனே இல்லை என்றாலும் மெல்ல மெல்ல நம்மை கேட்கும் போது மயக்கும் என்பது உண்பாய்
ஆஸ்கர் முந்தைய படம் உன்னாலே உன்னாலே போல் லீலை பாடல்களும் சிறப்பாக உள்ளது
முடிந்த அளவிற்கு ஒரிஜினல் கேசட்டை வாங்கவும் போலிகளை புறகணிப்போம்
MY MUSIC RATING 8.5/10
DONT MISS MY VOTE